கொங்கு வட்டத்தில் விசைத்தறி பட்டறைகளும், அதைச் சார்ந்த உப தொழில்களும், ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமில்லாமல் சகலரும் பாடுபடும் உழைக்கும் வர்க்கமும் அடங்கிய தனி உலகம் ஒன்று உண்டு. இங்குள்ள மக்களிடம் இருந்து கடும் உழைப்பு, எளிமை, அடுத்தவரை மதிக்கும் பண்பு, மரியாதை என கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. அதே நேரம் வருத்தப்படவும், ஆதங்கம் கொள்ளவும் கூடிய சங்கதிகளும் இல்லாமல் இல்லை.
இந்நாவலில் சித்தரிக்கப்பட்டு இருக்கும் மனிதர்களும், சூழ்நிலைகளும், சம்பவங்களும் முற்றிலும் கற்பனையன்று. நான் வளர்ந்த சூழ்நிலையில் கண்டும், கேட்டும், நெருக்கமாக உணர்ந்தும் உள்ளவர்களின் வாழ்க்கையையே இப்படைப்பு வாயிலாகப் பதிவு செய்துள்ளேன். நொடிக்கு இரண்டு மில்லியன் மின்னஞ்சல்கள் பரிமாறிக் கொள்ளப்படும் இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தின் உச்சத்தில் கூடக் கல்விக்குரிய கவனம் இல்லாமல் சிறு வயதிலேயே முதிரா காதல், அவசர திருமணம், அடுத்தடுத்த குழந்தைகள் என இருபது வயதுக்குள் தங்கள் மொத்த வாழ்க்கையையே வாழ்ந்து முடித்து விடுகிற பெண்கள் இங்கு அநேகம், இக்கதையில் வரும் ஆனந்தியைப் போல, சவிதாவைப் போல, சுமதியைப் போல
நம்மிடையே சத்தமின்றி நடமாடிக் கொண்டிருக்கும் இவர்களின் இருப்பை ஒருவிதத்தில் நாம் உணர்வதில்லை அல்லது அன்றாடப் பரபரப்பின் வேகம் நம்மைக் கவனிக்க விடாமல் கடந்து விடச் செய்கிறது. சற்றே நிதானித்து அருகில் சென்று இவர்களைக் கவனிக்கும் தருணமாக இவ்வாசிப்பை கொள்ளலாம்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 พฤษภาคม 2564
கொங்கு வட்டத்தில் விசைத்தறி பட்டறைகளும், அதைச் சார்ந்த உப தொழில்களும், ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமில்லாமல் சகலரும் பாடுபடும் உழைக்கும் வர்க்கமும் அடங்கிய தனி உலகம் ஒன்று உண்டு. இங்குள்ள மக்களிடம் இருந்து கடும் உழைப்பு, எளிமை, அடுத்தவரை மதிக்கும் பண்பு, மரியாதை என கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. அதே நேரம் வருத்தப்படவும், ஆதங்கம் கொள்ளவும் கூடிய சங்கதிகளும் இல்லாமல் இல்லை.
இந்நாவலில் சித்தரிக்கப்பட்டு இருக்கும் மனிதர்களும், சூழ்நிலைகளும், சம்பவங்களும் முற்றிலும் கற்பனையன்று. நான் வளர்ந்த சூழ்நிலையில் கண்டும், கேட்டும், நெருக்கமாக உணர்ந்தும் உள்ளவர்களின் வாழ்க்கையையே இப்படைப்பு வாயிலாகப் பதிவு செய்துள்ளேன். நொடிக்கு இரண்டு மில்லியன் மின்னஞ்சல்கள் பரிமாறிக் கொள்ளப்படும் இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தின் உச்சத்தில் கூடக் கல்விக்குரிய கவனம் இல்லாமல் சிறு வயதிலேயே முதிரா காதல், அவசர திருமணம், அடுத்தடுத்த குழந்தைகள் என இருபது வயதுக்குள் தங்கள் மொத்த வாழ்க்கையையே வாழ்ந்து முடித்து விடுகிற பெண்கள் இங்கு அநேகம், இக்கதையில் வரும் ஆனந்தியைப் போல, சவிதாவைப் போல, சுமதியைப் போல
நம்மிடையே சத்தமின்றி நடமாடிக் கொண்டிருக்கும் இவர்களின் இருப்பை ஒருவிதத்தில் நாம் உணர்வதில்லை அல்லது அன்றாடப் பரபரப்பின் வேகம் நம்மைக் கவனிக்க விடாமல் கடந்து விடச் செய்கிறது. சற்றே நிதானித்து அருகில் சென்று இவர்களைக் கவனிக்கும் தருணமாக இவ்வாசிப்பை கொள்ளலாம்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 พฤษภาคม 2564
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
คะแนนโดยรวมอ้างอิงจากการให้คะแนน 1
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย