அன்று படைத்த 'அன்னை பூமி' அடிமைத் தளைக்குள் சிக்கியிருந்தாள். அந்தச் சிக்கல் அவள் அகத்தே தாங்கியுள்ள பாத்திரங்களில் கூடத் தென்படத்தானே செய்யும்? ராஜ நாராயணனை இப்போது படைத்திருந்தால் வேறு விதமாகத்தான் சித்திரிக்கத் தோன்றும். சுவர்ண குமாரிக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் அளித்திருக்கலாம் என்று கருதுவதும் இயல்பே. திருமலை ஐயங்கார் கத்தரித்துக்கொண்டு வந்த பிறகும், பார்த்தசாரதி ஐயங்கார் அவரை நாடி வருகிறாரே. ஏன்? இந்தக் கேள்வியை வேணுவிடந்தான் கேட்க வேண்டும். கதையின் சூத்திரக் கயிறாக அல்லவோ அவன் வாழ்கிறான்?
ஆம்! கட்டின வீட்டிற்குக் குறை சொல்ல நாவுக்கு என்ன பஞ்சமா? அன்னை பூமி 1945-இல் ஆரம்பித்து 1946-ல் எழுதி முடித்த நாவல்.
காலம் உள்ளத்தை மாற்றுகிறது; உலகத்தை மாறுதலடையச் செய்கிறது; உணர்ச்சிகளைச் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு மாறுபடச் செய்கிறது; ஆனால் மனித இயல்பை மாற்றக் காலம் ஒன்றும் செய்ய முடியாது. வால்மீகி, காளிதாசன், வள்ளுவன், கம்பன், ஷேக்ஸ்பியர், கெத்தே, டால்ஸ்டாய், டாகுர், பாரதி எல்லோரும் சித்திரித்துள்ள மனித இயல்புகளைப் பாருங்கள்! காலத்தின் தோல்வி கண்கூடாகத் தெரியும்.
'அன்னை பூமி' பத்து ஆண்டுக் காலத்தில் பசுமை மாறவில்லை. பத்து ஆண்டுக்குப் பிறகும் பசுமையோடு தான் இருக்கும்.
- பி. எம். கண்ணன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 10 ธันวาคม 2563
அன்று படைத்த 'அன்னை பூமி' அடிமைத் தளைக்குள் சிக்கியிருந்தாள். அந்தச் சிக்கல் அவள் அகத்தே தாங்கியுள்ள பாத்திரங்களில் கூடத் தென்படத்தானே செய்யும்? ராஜ நாராயணனை இப்போது படைத்திருந்தால் வேறு விதமாகத்தான் சித்திரிக்கத் தோன்றும். சுவர்ண குமாரிக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் அளித்திருக்கலாம் என்று கருதுவதும் இயல்பே. திருமலை ஐயங்கார் கத்தரித்துக்கொண்டு வந்த பிறகும், பார்த்தசாரதி ஐயங்கார் அவரை நாடி வருகிறாரே. ஏன்? இந்தக் கேள்வியை வேணுவிடந்தான் கேட்க வேண்டும். கதையின் சூத்திரக் கயிறாக அல்லவோ அவன் வாழ்கிறான்?
ஆம்! கட்டின வீட்டிற்குக் குறை சொல்ல நாவுக்கு என்ன பஞ்சமா? அன்னை பூமி 1945-இல் ஆரம்பித்து 1946-ல் எழுதி முடித்த நாவல்.
காலம் உள்ளத்தை மாற்றுகிறது; உலகத்தை மாறுதலடையச் செய்கிறது; உணர்ச்சிகளைச் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு மாறுபடச் செய்கிறது; ஆனால் மனித இயல்பை மாற்றக் காலம் ஒன்றும் செய்ய முடியாது. வால்மீகி, காளிதாசன், வள்ளுவன், கம்பன், ஷேக்ஸ்பியர், கெத்தே, டால்ஸ்டாய், டாகுர், பாரதி எல்லோரும் சித்திரித்துள்ள மனித இயல்புகளைப் பாருங்கள்! காலத்தின் தோல்வி கண்கூடாகத் தெரியும்.
'அன்னை பூமி' பத்து ஆண்டுக் காலத்தில் பசுமை மாறவில்லை. பத்து ஆண்டுக்குப் பிறகும் பசுமையோடு தான் இருக்கும்.
- பி. எம். கண்ணன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 10 ธันวาคม 2563
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
คะแนนโดยรวมอ้างอิงจากการให้คะแนน 1
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย