ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து அழைப்பு வந்தால் ஒரு இனிய அதிர்ச்சி ஏற்படுவது இயற்கை.
“பிரதர், உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். வந்து போக முடியுமா?” என்று ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு பிற்பகலில் திரு. ஏவி.எம். சரவணன் அவர்கள் தொலைபேசியில் என்னிடம் கேட்டபோது எனக்கும் அத்தகைய இனிய அதிர்ச்சியே ஏற்பட்டது.
போனேன்.
“‘அப்பச்சி’யின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக வெளியிட விரும்புகிறேன். அதை எழுதும் பணியினை உங்களிடம் தர முடிவு செய்திருக்கிறேன். செய்து தர முடியுமா?” என்றார்.
அதிர்ச்சி நீங்கி வியப்பு மேலிட்டது.
என் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை என்னை நெகிழ வைத்தது. என் முதல் நன்றி அவருக்கு.
கடந்த ஆறு மாதங்களாக, தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் எனக்கு ஏவி.எம் என்ற மாமனிதரின் வாழ்க்கைக் குறிப்புகள்பற்றிய சிந்தனைதான்.
திரு. ஏவி.எம் அவர்களோடு பல்வேறு காலகட்டங்களில் தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை நூறுக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து சேகரித்ததே ஒரு புதிய அனுபவமாக அமைந்தது. எந்தெந்த அத்தியாயத்தில் அவை பொருந்தி வருமோ அங்கங்கே அவற்றை சேர்த்திருக்கிறேன்.
அவையே உங்கள் கரங்களில்...
วันเปิดตัว
อีบุ๊ก: 22 พฤศจิกายน 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
