ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
4
ศาสนา&จิตวิญญาณ
குருநாதன் திருவருளால் மீளவும் ஸந்திக்கிறோம். முன் மூன்று ஸந்திப்புக்களில் கூறிய முகமனுக்கு அதிகமாகச் சொல்ல வேண்டியது ஸ்வல்பமே. நேராக நம் தொகுப்புக்களுக்கே மிக மிக உபகரித்தவர்களில் முன்னணியில் நின்ற ஒரு பெரியார் தம்மைப் பற்றிக் குறிப்பிடவே கூடாது என்று ஆணையிட்டு விட்டதால், முன் மூன்று தொகுப்புக்களில் அவரைச் சொல்லி வந்தனம் கூறும் பாக்யம் கிடைக்கவில்லை. இப்போது அவர் ப்ரஹ்மபூதராகி விட்ட பிறகே துர்பாக்யவசமாக அந்த “பாக்யம்” கிட்டியுள்ளது! “ஆஞ்ஜநேய ஸ்வாமிகள்” என்றழைக்கப்பட்ட பூஜ்ய ஸ்ரீ அநந்தாநந்தேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்தாம்! பல்லாண்டுகள் ஸ்ரீ சரணர்களுடன் இருந்தவர்கள்.
மௌனமில்லாத நாட்களில் அநேகமாக ப்ரதி தினமும் இவர்களை வைத்துக்கொண்டுதான் ஸ்ரீ சரணர்கள் மணிக்கணக்கில் பல துறை விஷயங்களை அலசுவது வழக்கம். எனவே பொது பிரஸங்கங்களில் ஸ்ரீ சரணர்கள் கூறாததாக நம் தொகுப்புக்களில் வந்துள்ள (வரப்போகும்) ஏராளமான விஷயங்களில் கணிசமான பகுதி ஆஞ்ஜநேய ஸ்வாமிகளின் உபயம்தான். இத்தொகுப்பிலேயே “அத்வைதம்” என்ற பகுதி உள்ளதே, அதில் பெரும்பாகம் அவரது அன்பளிப்புத்தான் எனலாம். தோன்றும் துணையாக அவர் இருந்தபோதே அவரிடமிருந்து திரட்டிய பொக்கிஷத்தில் எஞ்சியுள்ள அநேக விஷயங்கள் இனியும் நம் தொகுப்புக்களை உருவாக்குவதற்கு அவரது தோன்றாத்துணையை வேண்டுகிறேன்.
ஸ்ரீ சரணர்களின் செழித்த சிந்தனை என்ற மகாவ்ருக்ஷம் ஒரு மையப்பொருளில் வானோங்கும் நடுமரமாக வளரும்போதே, அதில் எத்தனை அழகாக வேறு பொருள்கள் கிளைகளாகக் கப்பும் கவடும் விட்டு நாற்றிசையும் பரவுகின்றன என்பதை வாசகர்கள் அறிந்து மகிழ்வதற்காக “வண்டு ஸ்தோத்ரம்” என்ற பேருரை பல digression-களுடனேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. அமுதம் பருகும் வாசக நேயர்களுக்கு அமுதரின் ஆசி அமரமாகக் கிடைக்குமாக!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 22 มิถุนายน 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย