ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นอนฟิกชั่น
ஸ்ரீநிவாச இராமானுஜன் இந்திய கணித வரலாற்றின் முடிசூடா இளவரசராக திகழ்கிறார். எண் கணிதத்தில் அவர் தந்தருளிய தேற்றங்கள், ஊகங்கள் இன்றளவும் உலக கணிதவியலாளர்களை அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளதென்றால் அது மிகையாகாது. தமக்கு அதீத கணித சக்தி இருப்பதை உணர்ந்திருப்பினும் மற்றவர்களை போல வெறும் சுய முன்னேற்றத்தை கொடுக்கும் வாழ்க்கையை விரும்பாமல் கணிதத்தை தன் உயிர் மூச்சாக கருதி அதன் ரகசியங்களை அறிய அல்லும் பகலும் உழைத்து பெரும் சாதனைகளை புரிந்தார். இந்நூலில் இராமானுஜனின் விரிவான வாழ்க்கை நிகழ்வுகளையும், அவர் பெயரில் விளங்கும் அடையாளங்களையும், ஒரு சில கணிதக் குறிப்புகளையும் தெளிவாக கூற முயற்சித்துள்ளோம்.
இராமானுஜனை பற்றி ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கின்றன. ஆனால் மிகக் குறைந்த அளவிலேயே தமிழில் அவரை பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இதை கருத்தில் கொண்டு தாய் தமிழில் இராமானுஜனை பற்றி மிக விரிவான வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிடவேண்டும் என்ற உயரிய நோக்கோடு இப்புத்தகத்தை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் போன்ற அனைத்து தரப்பினரும் படித்து மகிழும் வண்ணம் எளிய முறையில் ‘பை கணித மன்றம்’ சார்பாக ‘தேசிய கணித ஆண்டு' என அறிவிக்கப்பட்ட 2012 ல் இந்தியாவின் தலைசிறந்த கணித மேதையான ஸ்ரீநிவாச இராமானுஜனின் காவியத்தை உங்களிடம் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம்.
பை கணித மன்றம்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 8 มีนาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย