ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
தன் வாழ்க்கையின் முற்பகுதியில் நிகழ்ந்து விட்ட ஒரு காதல் சோகத்தால், காதலையும், காதலிப்பவர்களை வெறுக்கிறார் தாமோதரன். அதன் காரணமாய், கம்ப்யூட்டர் வகுப்பிற்குச் சென்று வரும் தன் மகள் சித்ராவைக் கண் கொத்திப் பாம்பு போல் கவனிக்கின்றார்.
எதேச்சையாக நிகழும் சில சம்பவங்கள் அவரது சந்தேகத்தை அதிகரிக்கும் விதத்தில் நடந்தேறி விட, மகளைத் திட்டித் தீர்க்கிறார். அவள், “நீங்க சொல்லும் பையன் எப்படி இருப்பான் என்றே எனக்குத் தெரியாது...! அப்படியெல்லாம் எதுவுமில்லை” என்று கதறியும் நம்ப மறுக்கிறார்.
ஒரு நாள் மார்க்கெட் சென்ற தாமோதரன் ரத்த அழுத்தம் காரணமாய் மயங்கி விழ, அவரை ஒரு இளைஞன் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறான். அவன்தான் தந்தையின் சந்தேகத்தில் இருப்பவன் என்பது தெரியாமல், அவனுக்கு சித்ராவும், அவள் தாயாரும் நன்றி சொல்கின்றனர்.
தன்னைக் காப்பாற்றியவன் அந்த இளைஞன்தான் என்பதைப் புரிந்து கொண்ட பெரியவர் மனம் மாறினாரா...? இல்லை அதுவும் ஒரு நாடகம் என்று குதித்தாரா?
இளைஞர்களையும், இளைய சமுதாயத்தினரையும் பொறுப்பற்றவர்கள், என்கிற கண்ணோட்டத்திலேயே பார்க்கும் சில பெரியவர்களுக்கு சின்னச் சின்ன சம்பவங்களை மூலம் அறிவுரை கூறியிருக்கிறார் நாவலாசிரியர்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย