ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
கலை இலக்கியத் தளத்தில் கவிதைக்கானப்பங்கு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கவிதையால் என்ன செய்து விட முயும் அல்லது என்ன சாதித்துவிட முடியும் எனப்பலரும் கேட்கக்கூடும்.
மொழிக்குள் கட்டமைக்கப்படும் கவிதைகள் சமூகத்தின் நிகழ்கால பதிவுகள் மட்டுமின்றி தொலைதூரப்பார்வையோடு இருப்பது அவசியமாகிறது. ஒரு சாதாரண நான்கு வரிகளை உரைநடையாக்கும்போது அது சிறுகதையாகவோ, நாவல் அல்லது நாடகத்தின் ஒரு பகுதியாகவோ ஆகிவிடக்கூடும். மாறாக கவிதையாகும்போது அதன் சுவையும் தாக்கமும் வித்தியாசமானதாகவே இருக்கிறது.
நிகழ்கால தமிழ்ச்சமூகத்தில் கவிதைக்கான தளம் எல்லையற்று விரிந்திருக்கிறது. கவிதை எழுத வருகிறவர்கள் எவ்வித தயக்கமுமின்றி எழுத புதுக்கவிதை உலகம் வாசல் திறந்திருக்கிறது. ஹைக்கூ கவிதைகள் உள்ளிட்ட கவிஞர்கள் பலரும் கொண்டிருக்கும் நம்பிக்கை தமிழ்க் கவிதைக்கு பலம் சேர்ப்பவையாக உள்ளன. என்றாலும் மரபின் கூறுகள் உள்வாங்கி படைக்கும் கவிதைகளில் அழுகுணர்ச்சியும் நிறைந்த பொருள் செறியும் வெளிப்படுவதை உணரலாம்.
“இனிவரும் காலம்” என்னும் இக்கவிதைகள் வரிசையாக கடந்த நான்கு ஆண்டுகளில் எழுதியவற்றின் தொகுப்பாக உள்ளது. இக்கவிதைகள் ஒவ்வொன்றின் சூழலும் அவைகள் எழுதியவற்றின் பின்னணியும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவை. அகமும் புறம் சார்ந்தப் பிரச்சினைகளே இங்கு கவிதையாகி உள்ளன. கவிதைகள் காட்டும் பிரம்மாண்டமான உலகத்தில் இத்தொகுதி குறித்தான மதிப்பீடுகள் என்பது வாசிக்கும் உங்களால் நன்றாகவே அடையாளம் காணமுடியும். காரணம் எனக்கான நிலைப்பாடு, அவமானம், நம்பிக்கை, இலட்சியம், அரசியல் கோட்பாடுகள் அனைத்தும் இரத்தமும் சதையுமாக இவற்றில் பதிவாகியுள்ளது. சிறு கதைகள் பல எழுதிவந்த எனக்கு இது எனது நான்காவது கவிதைத் தொகுதி. இத்தொகுப்பு சிறப்புற வெளிவர பலரும் உதவியிருக்கிறார்கள். எனது கவிதையை நேசித்தும் வாசித்தும் வருகிற எனது மூத்த மகள் அ.வி அஜிதா பாரதி மற்றும் உங்களுக்கும் இதயவேந்தனின் இதயப்பூர்வமான நன்றிகள் என்றென்றும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
- விழி.பா. இதயவேந்தன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 ธันวาคม 2562
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย