ஓர் இளைஞனின் மனதில் காதல் புகுந்துவிட்டால்... அது படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமில்லை! காதலில் அகப்பட்டு இருப்பவரின் முகத்திலும்...நடை- உடை பாவனைகளிலும் தனி அடையாளங்கள் கண்டிப்பாகத் தெரியும். எல்லாக் காதல்களும் வெற்றியில் முடிவதில்லை. தோல்வியை சந்திக்கும்போது, பாதிப்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலர் அதை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டு, ‘ஒரு பேருந்தை தவறவிட்டுவிட்டால் அடுத்தப் பேருந்து பின்னாலேயே வரும்' என்கிற மனோபாவத்தில் சகஜமாகிவிடுவார்கள். ஆனால், சிலரால் அப்படி முடியாது. தங்கள் வாழ்வே முடிந்துபோனது போல மனமெல்லாம் சூனியத்தை நிரப்பிக்கொண்டு உயிரோட்டம் இல்லாமல் வாழ்வார்கள்.
இந்தக் கதையில் நந்தகுமாருக்கும் காதல் ஏற்படுகிறது. அது தோல்வியில் முடியும் சூழலை உணர்கிறான். அதைத் தோல்வி அடையவிடக் கூடாது என்று யுக்தியுடன் பல திட்டங்கள் போட்டு முயற்சிகள் எடுக்கிறான். அப்படியும் அந்தக் காதல் தோல்வியில் முடியும் நிலை ஏற்படும்போது... அவன் என்ன செய்தான்? அதை, முழு நாவலையும் படித்துத் தெரிந்துக்கொள்வதுதானே சுவாரசியம்?
பிரியங்களுடன்...., பட்டுக்கோட்டை பிரபாகர்
วันเปิดตัว
อีบุ๊ก: 3 มกราคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา