ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
“அஞ்சலி, கால் இப்போ எப்படி இருக்கு? பரவாயில்லையா? என்றான் பிரதீப் மென்மையாக அவர்களுக்குள் எதுவும் நடவாதது போல்.
அடடே! என்ன ஒரு ஆச்சரியம்? இப்படி பொறுமையாக கூட இவருக்கு என்கிட்ட பேசத் தெரியுமா? அன்றைக்கு என்னை பேசிய பேச்சேன்ன? இப்போ இப்படி குழைஞ்சு வழிஞ்சு பேசுறதுக்கு இவருக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? ச்சீ! நானும் தான் ரோஷமே இல்லாமல் இவரோட வரேன், என்று தன்னையே நொந்தவள், நீ என்னவோ பேசிக் கொண்டிரு, எனக்கென்ன என்பது போல் தன் வேலையை மறுபடியும் சிரத்தையாக செய்து கொண்டிருந்தாள் அஞ்சலி. அதாவது வெளியில் வேடிக்கை பார்ப்பதை!
நான் பேசினால், என்னை பார்க்கணும், எனக்கு பதிலும் சொல்லணும்னு சொல்லி இருக்கேன் தானே? இந்த ஒரு வாரத்தில எல்லாம் மறந்திடுச்சா, என்ன? என்றான் பிரதீப் சற்று குரலை உயர்த்தி.
அதில் உடம்பு தூக்கி வாரிப் போட பிரதீப்பை திரும்பி பார்த்தவள், இப்போ உங்களுக்கு என்ன வேணும்? என் கால் தானே? ரொம்பவே நல்லா இருக்கு. இப்போ எதையாவது என் கால்ல போட்டு உடைக்க வேணும்னாலும், அதையும் தாராளமா செய்யுங்க! என்று அவனை பார்த்து மூக்கு விடைக்க கத்திவிட்டு திரும்பி கொண்டாள் அஞ்சலி.
அஞ்சலியின் பேச்சை கேட்க கேட்க பிரதீப்பிற்கு முழியே பிதுங்கியது........”
நாம் வாழும் வாழ்க்கையில் எது ஆதிக்கம் செலுத்துகிறது?
பாசமும் நேசமுமா இல்லை வெறுப்பும் கோபமுமா??
ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நடந்த கொடிய நிகழ்வால், அஞ்சலியின் மேல் கொலைவெறியில் இருக்கும் பிரதீப். அந்த நிகழ்வைப் பற்றி எதுவும் அறியாமல், தன் போக்கில் வாழ்க்கையை சந்தோஷமாக வாழும் அஞ்சலி.
இவ்விருவரும் வாழ்க்கையில் இணைந்தால், என்ன ஆகும்? பிரதீப்பின் கோபம் அஞ்சலியின் மனதை கொன்று கூறு போடுமா? இல்லை அஞ்சலியின் மௌனமான எதிர்ப்பை பிரதீப் புரிந்து கொள்வானா?
இவர்களுக்கு திருமண வாழ்க்கை வரமா சாபமா?
அனைத்திற்கும் விடை கதையினுள்!!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 17 พฤษภาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย