ஒரு வரலாற்று நாயகன் இறந்து ஆண்டுகள் பல ஓடி மறைந்திருக்கலாம். ஆனால் அவனது உணர்வுகளும் கனவுகளும் நூறாண்டுகளுக்குப் பிந்திய மக்களையும் இயக்கும் சக்தியாய் ஒளிர்கின்றன. ‘அவனது’ சொற்களை ‘இவன்’ பேசுகிறான். அவனது கனவுகள் இவனுக்குள் விரிகின்றன. அவனது இலட்சியங்களை இவன் முன்னெடுத்துச் செல்கிறான். தனி மனிதனாக இறந்த அவன் இன்றோ இலட்சக் கணக்கானோராய் வாழ்கிறான். இவ்வாறு ஒரு தனி மனித வரலாறு ஒரு சமூக வரலாறாக மாறிவிடுகிறது. சமூக வரலாறாகும் தனித்தன்மை வாய்ந்தவரே வரலாற்று நாயகர் என்று ஏற்கப்படுகிறார். மக்களில் கரைந்து விடுகிறவர் மக்களின் முகவரியாகிறார். லெனின் வரலாறு என்பது இப்படித்தான் தனிமனித வரலாறாக இல்லாமல் புரட்சியின் வரலாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வரலாறாக அறியப்படுகிறது.
லெனின் வரலாறு புரட்சியின் வரலாறாகவும், புரட்சியின் வரலாறு லெனின் வரலாறாகவும் விளங்கும் இந்த அற்புதத்தை இங்கே மிக இயல்பாக எழுதிச்செல்கிறார் ஜீவபாரதி.
วันเปิดตัว
อีบุ๊ก: 7 ตุลาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา