ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นอนฟิกชั่น
மருத்துவத்திற்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்பது பொதுவாக எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. இந்தக் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் உருவானதே இந்நூல். ஜோதிடம் என்பதும் அறிவியல்தான் என்ற உண்மை தற்பொழுதுதான் மெதுவாக புரியத் தொடங்கியிருக்கிறது. ஜோதிடத்தை அறிவியலாக படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் தற்காலத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் பாலம் ஜோதிடம். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் இறுதியில் எல்லாம் இறைவன் செயல் என்று சொல்வதைப் பார்த்திருப்போம். இந்த நூல் ஆன்மிகத்தை வலியுறுத்தும் நூல் அல்ல. அதே நேரத்தில் நமது ஜோதிட சாஸ்திரமும், பழங்கால ஜோதிட வல்லுநர்களும் எந்த அளவிற்கு கிரஹங்களையும், மனித உடற்கூறுஇயலையும் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கின்ற ஒரு முயற்சி. உபநிஷத்துக்கள் அத்தனையும் அறிவியல் உண்மையை விளக்கும் அற்புதமான கண்டுபிடிப்புகளை உள்ளடக்கியவை. ரிஷிகளும் முனிவர்களும் அறிவியல் விஞ்ஞானிகள். குறிப்பாக நம் பாரத தேசத்தில் வானவியல் அறிஞர்கள் பலரும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது வரலாறு உரைக்கும் உண்மை. நம் இந்திய தேசத்தின் பெருமையான வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்று ஜோதிடம். அவற்றைப் பற்றி விரிவாக அறியலாமா...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 17 พฤษภาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย