ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
5
เรื่องสั้น
“வாத்தியார் சுஜாதா காட்டிய வழியில்…” சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் எல்லாமே சுஜாதா எழுதியது போல பல்நோக்கு களங்களுடன் கூடிய வித்தியாசமான கதைகள்தாம். கிட்டத்தட்ட எல்லாக் கதைகளின் அடிநாதமும் ஒரு மர்மம் / ஒரு திகிலான சம்பவம் சார்ந்ததாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று நிச்சயம் வேறுபடும்.
அம்மாவும் ஏர்ஹோஸ்டஸ் பேயும் சிறுகதை நான் நேரில் (ஒரு விமானப் பயணத்தில்) பார்த்த சம்பவத்தின் அடைப்படையில் எழுதப்பட்டது.
எங்கெங்கு காணினும் சக்தியடா சிறுகதை என் நண்பன் ஒருவனின் அண்ணிக்கு நேர்ந்த நிகழ்வும், அந்த அண்ணி துணித்திருந்தால் என்ன செய்திருக்க முடியும் என்பதின் கற்பனையே.
நாமே நீயோ / நானோ அல்ல; நாமே நாம் சிறுகதை என் நண்பன் ஒருவனின் தங்கையின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சியை ஒட்டிய கற்பனை உருவகமே.
கர்மா நின்று பேசும் சிறுகதை ஒருவித FLASH FICTION. சட்டென ஆரம்பித்து, சடுதியில் முடிந்துவிடும் இதுவும் நான் நேரில் சந்தித்த ஒரு நிகழ்வின் அடிப்படையில் உருவான கற்பனையாக்கமே.
மற்ற சிறுகதைகளிலும் அவ்வாறே. ஆசான் சுஜாதா அவர்கள் காட்டிய வழியில் அனாவசியமான வார்த்தை வர்ணனைகள், விரிவான விவரிப்புகள் போன்றவை எதுவுமின்றி சுருக்கமாக அமைய முயற்சி செய்துள்ளேன்.
படித்து இன்புறுங்கள். படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 เมษายน 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย