นิยาย
நண்பர் திரு. என். சி. மோகன்தாசின் படைப்புகளை நான் முதன் முதலில் பார்த்தது சாவி இதழில்.
பல பேனாக்களைக் குனியவைத்து, எண்ணற்ற எழுத் தாளர்களை உயர வைத்து ஊக்குவித்த பெருமை சாவிக்கு உண்டு. சாவியால் வளர்க்கப்பட்ட பல எழுத்தாளர்களுள் என். சி. மோகன் தாஸ் குறிப்பிடத்தக்கவர்.
அவரது எழுத்துகளையும் பெயரையுமே காண நேர்ந்த எனக்கு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது. கொச்சித் தமிழ்ச் சங்க அழைப்பை ஏற்றுக் குடும்பத்துடன் நான் போயிருந்தபோது, செட்டிநாட்டரசர் விருந்தினர் மாளிகையில் என்னை வந்து சந்தித்தார். இந்த அமைதியான மனிதரா இப்படி விஸ்வரூபம் எடுக்கிறார் என்று நான் வியந்தது உண்டு.
அப்புறம் வீட்டுக்கு அழைத்தார். சோட்டானிக்கராவிலுள்ள அவர் வீட்டிற்குக் குடும்பத்துடன் சென்றேன். பேசிக்கொண்டிருந்தபோது சொன்னேன்,” நீங்கள் சென்னைக்கு வந்தால் இன்னும் ஒளிவிடமுடியும்.” நான் சொன்னதற்காக அவர் சென்னை வந்தார் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர் சென்னை வர நானும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.
நாளிதழ்கள் என்பவை மல்லிகைப்பூ போன்றவை. வார இதழ்கள் என்பவை ரோஜாப்பூ போன்றவை. மாத இதழ்கள் என்பவை கூட, அடுத்த மாத இதழ்கள் வந்ததும் ஓரளவு வாடிவிடக்கூடிய இதழ்கள். நூல்கள் அப்படி அல்ல அவற்றுக்கு வயது வரம்பும் இல்லை. எத்தனையோ தலைமுறைகளைக் கடந்து நின்று வாழக்கூடிய ஆற்றல் நூல்களுக்கு உண்டு.
வளர்ந்து வரும் ஓர் எழுத்தாளரின் படைப்புகளுக்கு ஒரு நிரந்தரத்துவம் தர முனைந்ததில் மணிமேகலைப் பிரசுரத்திற்கு மகிழ்ச்சி; மனநிறைவு.
- லேனா தமிழ்வாணன்
วันเปิดตัว
อีบุ๊ก: 18 พฤษภาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา