Step into an infinite world of stories
வழக்கறிஞர் தம்பி திரு. கே.எஸ். இராதாகிருஷ்ணன், “தி.மு.க. – சமூகநீதி” எனப் படைத்துள்ள இந்த அருமையான நூல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில், காஞ்சியில் வெளியிடப்படுவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
சமூகநீதியின் தாயகம் தமிழகம் என்பதை இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. தமிழகத்தில் வாழும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை, அவர்களிலும் நலிந்தவர்களை - நசுக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்குத் திராவிட இயக்கம் கண்ட அருமருந்து சமூக நீதி. அந்தச் சமூக நீதியை வென்றெடுப்பதில் - பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் நடேசனார், முத்தையா முதலியார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரும், அவர்களைத் தொடர்ந்து இன்றைய தி.மு.கழகமும் மேற்கொண்ட - மேற்கொண்டுவரும் முயற்சிகளை - போராட்டங்களை எல்லாம் இந்நூலில் தெளிவாகத் தொகுத்துத் தந்துள்ளார்.
Release date
Ebook: October 7, 2021
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International