Step into an infinite world of stories
Fiction
எழுத்தாளர்களின் கதைகளில், நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் என்று சொல்லாவிட்டாலும் அநேகமாக தம் வாழ்க்கையின் அனுபவங்களை வைத்துத்தான் எழுதுகிறார்கள். சுத்தமாக கற்பனை என்று சொல்ல முடியாவிட்டாலும் பார்த்து, கேட்ட அனுபவித்த நிகழ்ச்சிகள், இன்பம் துன்பம் எப்படியோ வரி வடிவங்களில் தலைகாட்டும். "அனுபவ அலைகள்” என்ற இந்தக் கருத்துக்குளியலில் இளம் வயதில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பேட்டில் எழுதுவது போல் மிகலாகவமாகத் தம் எழுத்து வன்மையில் சித்தரித்துக் கொண்டே சென்றிருக்கிறார்கள்.
நம் வாழ்க்கையில் அன்றாடம் வீட்டில் நிகழும் நிகழ்ச்சிகள்தாம் என்றாலும் எழுத்தாளன் எழுத்தில் வடிக்கும்போது கற்பனை மெருகூட்டி பட்டை தீட்டிய வைரம்போல் பளிச்சிடச் செய்துவிடுவான்.
பாமரன் உலகைப் பார்க்கும் பார்வையும் எழுத்தாளன் பார்க்கும் பார்வையும் வெவ்வேறு விதம். எதையும் ஊடுருவிப் பார்த்து தான் பார்த்ததைப் பிறரும் காணும் வண்ணம் எழுத்தில் வடித்துக் காட்டி பிரமிக்க வைப்பது. செப்பிடு வித்தை காட்டுவது எழுத்தாளனின் தீர்க்க தரிசனத்தைக் காட்டும்.
இன்றைக்கும் இத்தனை வருடங்கள் ஆன பின்பும் நேற்று கேட்ட மாதிரி இருக்கிறது, நீங்களே சொல்லுங்கள். உங்களில் யாருக்காவது இந்த வயதில் இப்படிப்பட்ட வார்த்தைகள் கேட்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறதா? அதனாலேயே சொல்கிறேன், அனுபவ அலைகள் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகிறது என்று தன் முத்திரையைப் பதிக்கிறார்.
இந்த வகையில் எழுத்தாளர் திருமதி.அனுராதா ரமணன் அவர்கள் சொற்சிலம்பம் ஆடி வாசகர்களை மகிழச் செய்கிறார்.
Release date
Ebook: 3 January 2020
English
India