Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Language
Tamil
Format
Category

Lyric Poetry & Drama

முன்னுரை

"இப்படியா அப்படியா

எப்படி இருந்தது என

நாலைந்து சொற்களை

அவரே தந்து

வலியினைச் சொல்லுடன்

பொருத்தச் சொன்னார்.

உச்சி மகிழ்வுக்கும்

உச்ச வலிக்கும்

அனுபவிப்பவனிடம்

அடைமொழி இல்லை.

எம் வலி ஆகாது

உம் வலி".

கல்யாண்ஜியின் இக்கவிதைதான் நினைவிற்கு வந்தது -அழகிய பெரியவனின் கவிதைத் தொகுப்பினை படித்து முடித்தவுடன், கவிஞரது மகிழ்வின் உச்சியும், வலியின் உச்சியும் அடைமொழிகளுக்கு அப்பாற்பட்டவை.

அவர் வலி ஆகாது நம் வலி - என்றாலும், அழகியதும், அரசியல் நடிண்ணுணர்வும், அசுவியாலும், சமூகக் கூர்கணிப்பும், எதிர்ப்பின் துணிவும், கனவும், காதலும் கொண்டு பிசைந்த அந்தக் கவி மனதின் ஒரு ‘பிடிக் கனனவி' பார்க்கக் கிடைத்த பேரின்பத்தை இத்தொகுப்பு தருகின்றது.

கவிஞரது பார்வையும், அனுபவமும் ஒரு விளிம்பு நிலை பிராந்திய வட்டத்தைக் கடந்து, உலகளாவிய பொதுமைத் தன்மைக்குள் பிரகாசிப்பதே அழகிய பெரியவனின் தனித்தன்மை. அவரது இனத்துவ அனுபவங்கள், இனக்குழு வாழ்க்கை, இன ஒடுக்குமுறைக்கு எதிரான கலகம் - இவற்றை வைத்து மட்டுமே அவரது சரியாகப் பயணம் அளக்கப்படவில்லை.

அத்துனை வலியும், அனுபவங்களிலும், தெரு உண்மையும், வாழ்வின் துண்டாடப்பட்ட ஒரு காட்சியும், படிமங்களென உறைந்திருக்கின்றன. அதிகாரத்தின் குரூரமும், அவலமும் ஒருபோதும் மானுடத்தின் வீரியத்தைச் சற்றும் சூம்ப வைக்க இயலாதவை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்பவை இக்கவிதைகள்.

ஒரு கவிதை எப்பொழுதும் தர்க்கத்தினால் உலுக்கப்படுவதே இல்லை. அதன் விதிகளில் பகுத்தறிவிற்கு இடமில்லை - கற்பனையும், உள்ளுணர்வும், கால நேர்த்தியும் - இவற்றில் மட்டுமே கூவினத தஞ்சமடைகின்றது.

ஆனால், அழகிய பெரியவனின் கவிதைகளில் ஒரு நுட்பமான அரசியல் சடுறுவி நிற்க, தகிக்குமொரு நெருப்புக் குரல், "டெமாக்ளஸின் கத்தியாய்" ஆதிக்க வர்க்கத்தின் தலைமீது எப்பொழுதும் தொங்குகின்றது.

நடை, உத்தி, உருவம், உள்ளடக்கம் எல்லாவற்றையும் தாண்டி "மனுசக் கழுதைகளை" அழவைக்கின்ற, காதலிக்கச் செய்கின்ற, கோபமுறச் செய்கின்ற, ஒரு தனிக் குரலே இக்கவிதைகளின் அடிச்சரடு.

பெண் - பாட்டியாக, தாயாக, மகளாகக், காதலியாக வந்தாலும் - மறுக்கப்பட்ட வாழ்வின் பிரதிநிதியாகவும், பாட்டாளியாகவும், விளிம்பு நிலை மாந்தராகவும் இருக்கின்ற அந்த "தாய்மை" சித்திரமே இக்கவிதைகளில் தொக்கி நிற்பது.

ஒரு ஆண் மனம் அச்சொட்டாக அவற்றைக் கவிதைகளில் வடித்திருப்பதும், ஈரங்கசியும் ஒரு கவி மனம் அதற்குக் கை கொடுத்திருப்பதுவுமே இக் கவிதைகளின் வெற்றிக்கான காரணம்.

கவிஞரும் இந்தக் கவிதைகளைக் கண்டெடுத்து கோர்க்கவில்லை, தனதும், தன் புறத்துமான, தான் சார்ந்ததுமான வாழ்க்கையைப் பார்த்து, கவிதைகளாக்கி இருக்கிறார்.

வாசித்து, பகிர்ந்து, புரிந்துகொள்கின்ற முயற்சியில் கொஞ்சம் மயங்கிப் பிச்சியான வாசகப் பெருமிதமுடன், போப்பின் (Pope) இந்தக் கூற்றை நினைவுகூர்கிறேன்.

"We poets are (upon a poets word) of all mankind, the creatures most absurd!"

- தமிழச்சி தங்கபாண்டியன்

Release date

Ebook: 18 December 2019

Others also enjoyed ...