Chhava Prakaran 1 Shivaji Sawant
Step into an infinite world of stories
Fiction
தமிழ்நாட்டில் சைவ மடங்களும் வேதாந்த மடங்களும் தஞ்சை மண்ணில் நிரம்பத் தோன்றின. தமிழ் நாட்டு வேதாந்த மடங்களில் அத்துவைத மடங்கள் பல உள்ளன. துவைதம் என்பது சீவான்மாவும் பரமான்மாவும் வேறுவேறு எனக் கொள்ளப்படும் தத்துவம். அத்துவைதம் என்பது மேற்கூறப்பட்ட இரண்டும் வேறு வேறல்ல, இரண்டும் ஒன்றே என்பது. பின் கூறப்பட்ட அத்துவைத மடங்களில் காரைக்குடியில் உள்ள திருக்கோவிலுார் மடம் தலையாயது. ஆண்டவர் என அழைக்கப்பெறும் முத்துராமலிங்க ஞானதேசிகர் தொடங்கிய இம்மடாலயத்தில் பயின்ற கண்டனூர் நாகலிங்கய்யா அறிவும் ஞானமும் தெளியப் பெற்றவர். இவர்தம் வாழ்க்கை வரலாற்றையும் இவர் படைத்த நுால்களின் உள்ளடக்கத்தையும் ஆய்வு செய்வதுமே இந்நூலின் நோக்கம்.
Release date
Ebook: 9 May 2022
English
India