Step into an infinite world of stories
Fiction
சிறியவர்களுக்கு மட்டுமின்றிப் பெரியவர்களுக்கும் கூட நீதியைச் சொல்கிற நல்ல கதைகள் எப்போதும் தேவைப்படுகின்றன. இதை முழுமையாக உணர்ந்த 'தினமலர்' குழுமத்தின் ‘காலைக் கதிர்' நாளிதழின் 'வாரக்கதிர்' இணைப்பில் இந்தக் கதைகளை எழுதும் வாய்ப்பை எனக்கு நல்கினார்கள். ஒவியர் சேகர் அவர்கள் வரைந்த அருமையான சித்திரங்களுடன் இவற்றை வாரா வாரம் அழகுற வெளியிட்டார்கள். இந்தக் கதைகள் 'வாரக்கதிர்' வாசகர்களின் வரவேற்பை யும் நிறையப் பெற்றன.
இவை பெரும்பாலும் அனைவரும் அறிந்திருக்கக் கூடிய புராண, இதிகாசக் கதைகள்தான், ஒன்றிரண்டு கதைகளை நானே புனைந்தும் எழுதினேன். இவற்றை 'ஆத்மேஸ்வரன்' என்னும் புனை பெயரில் அப்போது எழுதினேன். இப்போது என்னுடைய பெயரிலேயே திருவரசு புத்தக நிலையத்தார் நூலாக வெளியிடுகிறார்கள்.
இந்தக் கதைகளை வெளியிட்டமைக்கும், இவை 'வாரக்கதிர்' இதழில் வெளியானபோது இடம்பெற்ற ஓவியர் சேகரின் சித்திரங்களை, இந்த நூலில் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தமைக்கும் 'தினமலர்' நிர்வாகத்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க அன்புடன்
சுப்ர. பாலன்.
Release date
Ebook: 18 December 2019
English
India