Step into an infinite world of stories
Fiction
"செங்கையன்" என்ற பெயரில் மாலைமலர் தேன்மலர் பகுதியில் 13 வாரம் தொடர்கதையாக வெளிவந்தபோது லட்சக்கணக்கான வாசகர்களின் இதயத்தை ஈர்த்து பாராட்டவும் செய்தது.
அரிதாக பூக்கும் குறிஞ்சியை போன்றவள் செண்டு. திருமணத்தன்று கணவன் பேசிய அவச்சொல் தாழாமல் செங்கையன் வீட்டில் தஞ்சம் அடைகிறாள்... ஊருக்காக மழை வேண்டி சுடு பாறையில் படுத்து தண்ணீர் பாறை விரதம் இருக்கிறாள்... மழை பொழிய வைத்து கற்பை நிலை நிறுத்துகிறாள். உதவி தேவைப்படும்போது மனிதாபிமானம் உந்தப்பட்டு செய்கிறோமே அதுதான் உறவுகளை வலிமைப்படுத்தும் என்பதை நிரூபிக்கிறான் செங்கையன்.
உறவும் இனிமையும் வாழ்வின் அதீத இன்பம் என்பதே செங்கையன் மீது கொண்ட காதலால் நிரூபிக்கிறாள் செல்லக்கிளி! நிலத்துக்கு ஆசைப்பட்டு ஊர் பாறையின் ஊற்றை அடைத்து வறட்சியை உண்டாக்கி... பஞ்சம் வரவழைத்து... ஊரையே காலி செய்கிறான் மிராசு. தவறுகளை ஏற்று மன்னிப்பு கேட்பது ஆத்மாவை தூய்மைப்படுத்தும்; என்பதை உணர்த்தி அந்த கிராமத்தை மீண்டும் வளம் கொஞ்சம் வைக்கும்போது மாளாத மழை பொழிவது கிராமத்தில் உள்ள அனைவரின் நெஞ்சங்களில் மட்டுமல்ல அனைவரின் மனங்களிலும் தான். இந்த மாற்றம், மறுமலர்ச்சி எப்படி? என்பதை விளக்கும் கதை "மனசெல்லாம் மழை மேகம்". இதை படிக்கின்ற ஒவ்வொருவரின், மனசும் மழை மேகமாக மாறும் என்பது உறுதி.
Release date
Ebook: 14 February 2023
English
India