Step into an infinite world of stories
இலக்கியம் என்பது உண்மை; வாழ்க்கையின் பிரதிபலிப்பு. மனிதனைப் பற்றிய கண்ணோட்டம், மனிதனின் விருப்பு, வெறுப்புகள், குடும்பம், சமூகம் இவற்றுடன் அவனுக்கு உள்ள உறவு, ஈடுபாடு, ஈடுபாடின்மை இவற்றை முழுமையாக காட்டுவதே இலக்கியம். மானுடத்தின் தன்மையை நன்கு உணர்ந்து, மானுடத்தின் சாயலோடு ஒட்டிப்போய், மானுடத்தின் மேன்மையைக் கருதி எழுதப்படுவதே உண்மையான முற்போக்கான இலக்கியம்.
இலக்கியம் இன்றைய சமூகத்தை பிரதிபலித்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தை ஒவ்வொரு கதையிலும் காண முடிகிறது. 'மௌனமே காதலாக' என்னும் சிறுகதை இலக்கிய சிந்தனையில் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. உண்மைக்கு புறம்பில்லாமல் எழுதி இருக்கிறார். இளம் உள்ளங்களை நன்கு புரிந்துகொண்டு காதல் எனும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்களை தெளிவாக குழப்பாமல் எழுதி இருக்கிறார். இது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம். வாசகர்களை நாகலட்சுமியாகவும், சந்தானமாகவும் மாறிமாறி அவஸ்தைப்பட விட்டிருக்கிறார். இது போன்ற பல சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்...
Release date
Ebook: 17 August 2022
English
India