Step into an infinite world of stories
Religion & Spirituality
1930-களில், ஒருமுறை சென்னையில் காஞ்சி ஸ்ரீ பரமாச்சார்யார் சிவானந்தலஹரியை விளக்கிப் பல நாட்கள் உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அதில் உள்ள நூறு ஸ்லோகங்களில், ரமண மஹரிஷி பத்தைப் பொறுக்கியெடுத்து ஒரு சாரமாகக் கொடுத்துள்ளார் என்று ரமண பக்தர் ஒருவர் சொல்லி, அதை மட்டும் பாராயணம் செய்வது போதுமா என்று பெரியவரைக் கேட்டார். அதற்கு அவர் “பேஷாகப் பாராயணம் செய்யலாம்; ரமணர் சொன்ன பின் ஏன் இந்தக் கேள்வி?” என்று பதில் அளித்து அதை வெகுவாக ஆமோதித்தார். அந்தத் தொகுப்பு வெகு நேர்த்தியாக பக்தியின் பலனையும், வழிகளையும் பற்றிக் கூறி, அவ்வாறு இருக்க முடியவில்லை என்றால் எது நடப்பதில்லை என்றும் விளக்குகிறது. தொடர்ந்து, வினைப்பயன் நம்மைத் துரத்தினால் என்ன செய்து அதிலிருந்து மீள்வது என்றும், வாதங்கள் எதிலும் ஈடுபடாமல் இறைவனிடம் உடனே சரணடையவேண்டியதன் அவசியம் பற்றியும் கூறுகிறது. அவ்வாறு சரணடைந்தவன் எவ்வாறு வாழவேண்டும் என்று விளக்கி, பின்னால் அவனுக்கு எப்பிறவி வாய்த்தாலும் அவன் இறைவனின் திருவடிகளைப் பற்றியிருப்பது ஒன்றே முக்கியம் என்று வலியுறுத்துகிறது. அவ்வாறு செய்வதால் பக்தன் எங்கே, பகவான் எங்கே என்று தெரியாதபடி அவர்கள் இருவரும் ஒன்றாகிவிடுவதைக் கூறி இத்தொகுப்பு முடிக்கிறது.
Release date
Ebook: 5 February 2020
English
India