Step into an infinite world of stories
Religion & Spirituality
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனான சிவபரம்பொருள். அங்கிங்கெனாதபடி -பூலோகத்தில் பல திருத்தலங்களில் எழுந்தருளி இருந்தாலும், திருக்கயிலாய மலையில் சிறப்பாக. உமையொருபாகனாக சிவகணங்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் புடைசூழ வீற்றிருந்தருளுகிறார். திருக்கயிலாய தரிசனம் கிடைக்கப்பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும்.
இந்நூலில் உள்ளவைகளைத் தொகுத்து, பதிப்பிக்கும் வாய்ப்பை சிவபெருமான் அடியேனுக்கு அருளியது முன்வினைப் பயன் என்றே கருதுகிறேன்
இந்நூலில் உள்ளவைகளைத் தொகுத்து முடித்தவுடன் கயிலாய தரிசனமே கிடைக்கப்பெற்ற நிறைவு ஏற்பட்டது. உருகி உருகிப் பாடியருளிய அருளாளர்களது இத்திருப்பதிகங்கள் நம்மை கயிலாயத்துக்கே கொண்டுசெல்லும் வலிமை வாய்ந்தவை. திருக்கயிலைப் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் இப்பதிகங்களைப் படித்து மனதால் சிவனுடன் ஐக்கியமாகலாம்
Release date
Ebook: 17 August 2022
English
India