Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
நமது பாரத பூமி பழம் பெரும் பூமி. புண்ணிய பூமி. கலைகள், கலாச்சாரங்கள் நிறைந்த பூமி. காலத்தால் அழியாத செல்வங்களான வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவைகளெல்லாம் பலருக்குத் தெரிந்ததுதான். ஆனால் பலர் தெரிந்து கொள்ளாத தத்துவங்களைப் பற்றி அபூர்வமாக நாம் அறிந்துக் கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. திருக்குருகூர் திருவந்தாதி என்னும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள அற்புதமான 101 பாடல்கள் அந்தாதி வடிவில் திருக்குருகூர் பெருமானைப் பற்றிய கருத்துக்களாக அமைந்துள்ளது.
கவிமாமணி இளநகர் காஞ்சிநாதன் அவர்கள் அந்தாதிக்குரிய இலக்கண முறைகளை முறையாகக் கையாண்டு, பதப்படுத்தி நூலினைத் தந்திருக்கின்றார். இந்தப் பணியை நாம் எல்லோரும் அகமகிழ்ந்து போற்ற வேண்டிய ஓர் அரும்பணியாகும். எழுதப் படிக்கத் தெரிந்த எவரும் படித்து இன்புறத்தக்க வகையில் துவக்கம் முதல் இறுதிவரை தொய்வுறா வண்ணம் அந்தாதி இனிதே படைத்திருக்கின்றார்.
இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள அற்புதமான பாடல்களையும், ஆன்மீக, தார்மீகத் தத்துவங்களையும் படிக்கும் ஆர்வமும், வாய்ப்பும் நம் அனைவர்க்கும் ஏற்படும் என்பது அடியேனின் பரிபூரணமான நம்பிக்கை.
இவர் தமிழுக்கு என் வணக்கங்கள் உரித்தாகுக.
இவர் புலமைக்கு என் போற்றுதல்கள் நிறைவாகுக.
அன்பன்
கே. பத்மநாபன்
Release date
Ebook: 5 February 2020
English
India