Step into an infinite world of stories
Fiction
மாலை மதி வாசகர்களை மகிழ்வித்த நாவல். உங்களையும் கவரும். வெண்ணை போல் வழுக்கிக் கொண்டு போகிற வாழ்க்கை அல்ல, செண்பாவின் குடும்ப வாழ்க்கை. திசை மாறும் கணவன் மோகன். உணர்வு பூர்வமாக துவளும் மகள் விஜி. அவளுக்கு அஞ்சு வயதான போது பிரிந்த அப்பா. அவள் பதினெட்டு வயது ஆன போது, தன்னுடன் வந்து இருக்கும்படி கூப்பிடுகிறார். நான் அப்பாவுடன் ஒரு வருஷம் இருந்துவிட்டு வருகிறேன என்று அம்மாவிடம் சொல்ல. செண்பா சொல்கிறாள் “அங்கே சாந்தி என்ற உன் அப்பாவின் மனைவி இருக்கிறாள். உன்னால் அவளுடன் அட்ஜஸ்ட் பண்ணி இருக்க முடியுமானால் போய்விட்டு வா..உன் விருப்பம் என்கிறாள் செண்பா. மகளை அங்கே அனுப்பியது சரியா?
சாந்தி......அப்பாவின் ரெண்டாவது மனைவி, அவர்கள் குழந்தைகள் ராம்-லக்ஷ்மன். இங்கே பல அதிர்ச்சிகளை சந்திக்கிறாள் விஜி. சாந்தியை பிரிய விரும்பும் அப்பா சாந்தி செய்யும் துரோகம். பிள்ளைகள் பற்றிய மர்மம். ரோஹித் என்ற மனிதனின் தலையீடு
விஜி எப்படி வாழ்க்கையை சமாளிக்கிறாள்? அப்பா மோகன் அம்மா செண்பாவிடம் திரும்பி வருக்கிறாரா? விஜி சேர்த்து வைக்க முயல்கிறாளா? சாந்தியின் கதி என்ன? குழந்தைகள் ராம்-லக்ஷ்மன் கதி என்ன? என்பது தான் கதை. விறுவிறு நடையில். .ஒரு நதியின் ஜதி போல் ஓடும் கதை. படித்துப் பாருங்கள்.. முழுவதும் படித்து முடிக்கும்வரை கீழே வைக்க மனம் வராது.
Release date
Ebook: 28 March 2025
Tags
English
India