Step into an infinite world of stories
Personal Development
“ உந்தி எழு” ஒரு புது விடியல்!
மானுட சமுதாயம் முன்னேறிட பல அணுகுமுறைகளை எடுத்துக்கூறி வெளிவரும் எண்ணற்ற நூல்களில் மு.ப. நடராசன் அவர்களின் “ உந்தி எழு” ஓர் மாறுபட்ட புதிய படைப்பு.
இது ஒரு தலைமைத்துவத் திறனாய்வு நூல்.
கடின உழைப்பும் தொடர் முயற்சிகளையும் கொண்ட மானிடர்கள் வெற்றியின் எல்லையை அடைய முடியவில்லை. அடைந்தாலும் அதனை தக்கவைக்க முடியாமல் தடுமாறுகின்றனர். ஏன்? என்ற சிந்திக்கத் தூண்டுகிறது இந்த நூல். தலைமைத்துவப் பண்பைப் பெற்றால்தான் வெற்றியின் சிகர எல்லையை சுலபமாக எளிதில் அடைய முடியும் என்கிறார்.
நம்மை திறனாய்வு செய்யும் வழிமுறைகள் என்ன? அணுகுமுறைகள் என்ன என்பதை மிக அழுத்தமாகக் கூறுகிறார் ஆசிரியர்.
மிக நல்லநாள், மனப்பக்குவம், நுண்ணறிவுத் திறன், சிந்தனைத் திறன், சுயமதிப்பீட்டுத் திறன், நேரம், காதல், நட்பு, வெற்றி போன்ற தலைப்புகளில் மிக நுட்பமான முறையில் பல நுணுக்கங்களை ஆசிரியர் தந்துள்ளார். இது அவரது அனுபவ உணர்வின் வெளிப்பாடு ஆசிரியரின் இப்படைப்பு புதியது!
இது சமுதாயத்தின் புது விடியலின் ஓர் நிகழ்வு!
Release date
Ebook: 3 January 2020
Tags
English
India