Step into an infinite world of stories
Fiction
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்ற பழமொழி நமக்கு எத்தனையோ நினைவலைகளைத் தோற்றுவிக்கிறது.
உதய நிலா
சிறு உலகத்தில் உதயமாகி உலவி வரும் பெண்களின் நெஞ்சில் எத்தனை எத்தனை ஆசைகள்... கனவுகள்...
எல்லாம் நிறைவேறுகிறதா?
ஆண் பெண்ணைக் காதலிப்பதும், பெண் ஆணைக் காதலிப்பதும் இயற்கை. நினைப்பது நடப்பதில்லை என்பதை இங்கு தான் புரிந்து கொள்கிறோம்.
அதற்கு உதய நிலா கதாநாயகியும் விதி விலக்கல்ல. மாமன் மகனின் காதலை நிராகரித்து சிறு வயதில் காதல் என்று அறியாமல் பழகிய பாபுவின் நினைவு மறையாமல் நிற்கும் பொழுது - அதுதான் காதல் என்று உணருகிறாள்.
மாமன் மகன் குமாரின் காதலை உணராதவளாகி மறுத்துவிட்டு கிராமத்திற்குப் போகிறாள்.
பாபு ஆற்றுடன் போய்விட்ட செய்தி கிடைத்து துடிக்கிறாள்.
ஆனால் விதி
மீண்டும் பாபுவை டாக்டராக அவள் முன் நிறுத்துகிறது. ஆனால் அடைய முடியாத நிலை.
உதய நிலாவில் இன்னும் பல கதாபாத்திரங்கள் உலவுகிறார்கள்.
மீண்டும் கதாநாயகி ஹனி குமாரை மணக்கப் போகிறாளா?
- இது வாசகர்களுக்கு எழும் கேள்வி.
இதற்கு விடையை நான் சொல்லி விட்டால் எப்படி?
வாசகர்களே! நீங்களே படித்தால்தான் “நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்?” என்பது புரியும்.
படித்துப் பாருங்களேன்!
வாசகர்களாகிய உங்களுக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- லட்சுமி ராஜரத்னம்
Release date
Ebook: 5 February 2020
English
India