ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
தினத்தந்தி சார்பாக வெளியாகும் என்னுடைய முதல் நாவல்! இதைத் தொடராக குடும்பமலரில் எழுதும்போது, எனக்கு முழு சுதந்திரம் தரப்பட்டது. அவகாசமும் இருந்ததால் வித்தியாசமாக சிந்திக்க முடிந்தது.
"அதிகாலை இருட்டு” என்ற தலைப்பை படிக்கும்போது இது ஒரு துப்பறியும் தொடர் என்று தோன்றும்.
ஆனால் முழுக்க, முழுக்க இது ஒரு சென்டிமென்ட் தொடர். குடும்ப பின்னணி, பாசத்துக்கும் ஏங்கும் இதயங்கள், பணம் கொட்டிக்கிடந்தாலும் தாங்கிப் பிடிக்கும் பாசம் இல்லையென்றால், கரன்சிகளால் சாதிக்க முடியாது என்பதை அழகாகச் சொல்லும் வாய்ப்பு இந்தப் புதினத்தில் எனக்குக் கிடைத்தது.
தாய் கிடைக்காத ஒரு மகள் - மகளை அடைய முடியாத ஒரு தாய் - நெருக்கத்தில் இருந்தும் நெஞ்சம் தவிக்கும் தவிப்பு - சூழ்நிலை காரணமாக சொல்ல முடியாத இறுக்கம் - இத்தனையும் உள்ளே வந்து விட்டது. பரபரப்புக்கு பஞ்சமே இல்லை!
என்னை எழுது... என்னை எழுது என நமக்குக் கட்டளையிடும் ! குணாதிசயம், படைப்புக்கு பிதாமகன்!
அது கிடைத்துவிட்டது. எழுத உட்கார்ந்தால் ஒரே நேரத்தில் நான்கைந்து அத்தியாயங்கள் சரமாரியாக வந்து விழும். முப்பது பகுதிகளைக் கடந்ததும், இது பெரிதாக வரும் என்பதை உள்மனது சொல்லிவிட்டது.
அதை தினத்தந்தி நிர்வாகத்திடம் சொன்னபோது, அவர்கள் என் கைகளை கட்டவே இல்லை. அதனால் 48 வாரங்கள்.
ஒரு வருட காலத்துக்கு ஏறத்தாழ வெளிவந்த தொடர்! நான் எழுதிய தொடர்களில் இதுதான் என்னைப் பொறுத்த வரை நீளமான பெரிய தொடர். அவர்கள் கட்டுப்படுத்தவே இல்லை. வாராவாரம் வரும் வாசகர் கடிதங்கள் என்னை அதிகமாக ஊக்குவித்தது.
இந்த அதிகாலை இருட்டு, எனது எழுத்துப் பயணத்தில் பெரிய வெளிச்சத்தை வீசிய தொடர்!
நன்றி! தேவிபாலா
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มกราคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย