ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
‘ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்’ என்னும் இந்த நூல் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, நான் எனது இரண்டு 'பிளாக்'குகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.
2011-ம் ஆண்டு முதல் 2021 வரை எழுதிய கட்டுரைகளின் முதல் பகுதிதான் இது. இந்து மதம், ஆழ்வார்கள் பற்றி இன்னும் நிறைய கட்டுரைகள் உள்ளன. அவை இன்னும் ஒரு தொகுதியில் இடம்பெறும்… என்னுடைய இந்த நூல் கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகளாக எழுதியதால் சொன்ன விஷயங்களே மீண்டும் வரக்கூடிய ஒரு குறைபாடு இருக்கும். இதன் மூலம் தமிழ் மக்கள் அறியாத பல புதிய விஷயங்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய கருத்துக்களை தனியாகவே நான் தந்துள்ளேன். அவைகளை ஏற்பதும் ஏற்காததும் உங்களின் தனிப்பட்ட உரிமை ஆகும்.
பாரதியார் சொன்னதை இங்கு நினைவுபடுத்தல் பொருத்தமாக இருக்கும். நிறைய ஞானிகள், அரசியல் தலைவர்கள், தேச பக்தர்கள், புனிதர்கள் பற்றி பாரதியார் பாடியுள்ளார். ஆயினும் அவர் மீது அதிக செல்வாக்கு உண்டாக்கியவர்களில் ஒருவர் நம்மாழ்வார். அவரது ஆங்கிலக்கட்டுரைகளில் இதைக் காணலாம். இந்தத் தொகுப்பில் உள்ள நம்மாழ்வார் பற்றிய இரண்டு கட்டுரைகளும் அவரை நினைவுபடுத்தும் என்பதில் ஐயமில்லை.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 20 กรกฎาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย