ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
சீரான குடும்ப அமைப்பையும் சீர் குலைந்த அமைப்பையும் இத்தொகுதியில் உள்ள சிறுகதைகள் பேசுகின்றன. அதனால், முரண்பட்ட இந்த நிலைகளை எழுதும் ஆசிரியரின் திறந்த மனத்தை (Unbiased) இக்கதைகள் சுட்டிக் காண்பிக்கின்றன. 'கமலத்'தில் வரும் கமலம், 'ஜீவ அம்சத்'தில் வரும் குஞ்சம்மா ஆகியோர் கணவன் என்ற பெயருக்காக ஆணுக்கு மரியாதை தர மறுத்துத் தம் சொந்தக் கால்களில் நிற்கிறார்கள். இருவரிடமும் அவர்களின் தைரியத்துக்கும் நிலைப்பாட்டிற்கும் உறுதியாகக் கூட நிற்பது குழந்தைகள் மீது கொண்ட பாசமும் அவர்களின் எதிர்காலம்மீது கொள்ளும் அக்கறையும் தான். ரோஸ்மேரியின் நாய்க்குட்டி., 'நாக்கு', 'ஏற்பாடு' ஆகிய கதைகளில் சீரான குடும்ப அமைப்பு எவ்வாறு மனித மனமாச்சரியங்கலற்ற வாழ்க்கையை உருவாக்கித் தருகின்றது என்பதைக் காணலாம். பொதுவாக ஸிந்துஜாவின் கதைகளில் விரவிக் கிடக்கும் புத்திசாலித்தனமான சம்பாஷணைகளை, இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளிலும் ஒரு வாசகர் காண முடியும்.
புத்திசாலித்தனத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள்?
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 24 เมษายน 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย