นิยาย
நமசிவாய என்கிற பஞ்சாட்சரத்தைப் போற்றிப் பரவசமடைந்தார் மாணிக்க வாசகர்.
நகைச்சுவை என்கிற ஐந்தெழுத்தையும் அவ்வாறே போற்றி அன்றாட வாழ்க்கை தரும் அலுப்பை விரட்டிய நகைச்சுவை எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணினால் பல விரல்கள் மிகுதியாக நிற்கும்.
நகைச்சுவையை உபாசிப்பவர்கள் போற்றப்படுகிறார்களா?
"உங்க கடையிலே இருக்கிற அழுகிய தக்காளி, முட்டை எல்லாவற்றையும் கொடுங்கள்” என்று காய்கறிக் கடையில் ஒருவர் கேட்டாராம்.
“இன்னிக்கு நடக்கப் போற ஷோவிலே பஃபூன் மேலே வீசத்தானே?”
"ஹூஹூம். நான்தான் அந்த பஃபூன்.”
நகைச்சுவை மன்னர் பி. ஜி. வுட்ஹவுஸ் தான் எழுதிய கடிதங்களை ஜன்னல் வழியாக வெளியே போட்டு விடுவாராம். அந்தப் பக்கம் போகிற ஆள்கள் கடிதங்களை பயபக்தியுடன் எடுத்து தபால் பெட்டியில் சேர்த்து விடுவார்களாம்.
சென்னையில் ஓர் இலக்கியக் கூட்டம். கொத்து கொத்தாக அரங்கின் வெளியில் எழுத்தாளர்கள். என்னை ஓர் அறிவுஜீவி கேட்டார்.
“நீங்கள் எழுதுகிறீர்களா?”
"ஆமாம். ஏதோ...”
“சப்ஜெக்ட்?”
“நகைச்சுவை."
மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் இரும்புத் துண்டிலிருந்து விலகிவிடும் எலக்ட்ரோமாக்னெட் போல அவர் என்னிடமிருந்து கழண்டு கொண்டார். பிறகு என் பக்கம் திரும்பவே இல்லை.
காந்தமாக நகைச்சுவை எழுத்துகளால் ஈர்க்கப்படுபவர்கள் மிகச் சிலரே.
நன்றி.
ஜே.எஸ்.ராகவன்
วันเปิดตัว
อีบุ๊ก: 11 ธันวาคม 2562
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา