นิยาย
அமராவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதில் ஒரு பொல்லாத முதலையும் வசிக்கிறது. அடிக்கடி கரை ஒதுங்கும் முதலையைக் கண்டு ஊரே பீதி அடைகிறது. அதே ஊரில் மனைவியை அடித்து உதைத்து சித்ரவதைப்படுத்தும் குடிகார கணவன். பள்ளிக் கூடத்திலிருந்து வீடு திரும்பும் அவர்களது மகனுக்கு எதிரே கணவனும், மனைவியும் சண்டை போட்டுக் கொண்டு, வழக்கம் போலவே கணவன் தன் மனைவியை அடித்து உதைத்து அவளது கழுத்தில் தொங்கிய தாலி கயிறை அறுத்து பிடிங்கிக் கொண்டு வெளியேற முயற்சி செய்யும்போது - அந்த கயிறு மகனால் பறிக்கப்படுகிறது. துளியூண்டு தங்க திருமாங்கல்யம் தொங்கும் அந்த தாலி கயிறை மகனிடமிருந்து பறிப்பதற்காக துரத்துகிறான் அந்த குடிகார கணவன்.
முதலை படுத்திருக்கும் ஆற்றின் மேலே ஆபத்தான தட்டிப்பாலத்தின் நடுவில் மகனுக்கும், தந்தைக்கும் போராட்டம் வலுக்கிறது. தாலிக்கயிற்றை ஆற்றுத் தண்ணீருக்குள் வீசி எறிகிறான் மகன். அதை எடுப்பதற்காக தண்ணீருக்குள் பாயும் குடிகாரத் தந்தையை முதலை கவ்விப் பிடிக்கிறதா வாருங்கள் வாசித்துப் பார்ப்போம்...
วันเปิดตัว
อีบุ๊ก: 11 ธันวาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา