அன்புள்ள உங்களுக்கு.... வணக்கம்.
இது வெவ்வேறு கால கட்டத்தில் நான் எழுதிய குறுநாவல்கள்களில் ஒன்று. இந்தக் குறுநாவல்கள்களில் உள்ள பொதுவான ஒற்றுமை என்றால்... எல்லாமே சமூக, காதல் கதைகள். துப்பாக்கி வெடிக்காத, ரத்தம் சிந்தாத கதைகள். இவை எல்லாமே மாத நாவல்களாக வெளிவரும் மாத இதழ்களில் எழுதப்பட்டவை. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியையும், என் பதிலையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
கேள்வி: மாத நாவலுக்கு இலக்கிய அந்தஸ்து கிடையாது என்கிறார்களே, சரியா?
பதில்: எனக்கு இலக்கியமாகப படுவது உங்களுக்கு இலக்கியமாக படாது. அவசியமும் இல்லை. எது இலக்கியம் என்று நூறு பேரை கேட்டால் இருநூறு பதில்கள் வரும். 'மாத நாவல்' என்பது சிறுகதை போல, தொடர்கதை போல ஒரு வடிவம்! அந்த வடிவத்தில் வழங்கப்படும் தனித் தனி கதைகளை தாராளமாக விமரிசிக்கலாம். ஒட்டு மொத்தமாக ஒரு வடிவத்தையே புறக்கணித்துப் பேசுவது ஆரோக்கியமான விமரிசனம் அல்ல! கம்ப இராமாயணம் ஆயிரமாயிரம் பாடல்களைக் கொண்ட இலக்கியம் என்றால்... ஒன்றே முக்கால் அடி கொண்ட திருக்குறளும் இலக்கியம்தானே? கவிதைகளில் மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ என்று பல வடிவங்கள் இருப்பதுபோல கதைகளில் ஒரு வடிவம் மாத நாவல்!
பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்
วันเปิดตัว
อีบุ๊ก: 11 ธันวาคม 2562
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา