ศาสนา&จิตวิญญาณ
கீதை பிறந்த நாட்டில் நாமும் பிறந்துள்ளோம் என்று ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்பார்கள். எங்கு கீதை பேசப்படுகிறதோ பயிலப்படுகிறதோ, சிந்திக்கப்படுகிறதோ அங்கு மன அமைதியும் வாழ்க்கையின் நுட்பமும் உணரப்படுகிறது.
கீதை என்ற அற்புத நூலைத் துளியாவது நுகராதவர்கள் ஜென்ம நஷ்டப்பட்டவர்களே. கீதையை ஆராயாத அறிஞர் பெருமக்களில்லை. அற்புதமான மொழி பெயர்ப்புக்கள். ஆங்கிலத்தில் கீதையை ஆராய்ந்து வந்திருக்கும் நூல்களுக்கு அளவே இல்லை.
எனக்கு ஒரு சின்ன ஆசை ஏற்பட்டது. எந்த ஆன்மீக நூலுமே பாமரர்களுக்குப் புரிவதால் மட்டுமே புனிதமாகிறது என்பர் பெரியோர். 700 சுலோகங்கள் உள்ள கீதை நூலிலிருந்து கருத்துக்களை மட்டும் எளிமைப்படுத்தி - இரு ரிக்ஷாக்காரர்கள் பேசிக் கொள்வது போல இதை எழுதியுள்ளேன். மகத்தான நூலான கீதையை நான் வடிகட்டவோ நீர்ப்படுத்தவோ செய்ததாக எந்த அன்பரேனும் நினைத்தால் பிழை பொறுத்தருளுக.
இங்ஙனம், ஜ.ரா. சுந்தரேசன்
วันเปิดตัว
อีบุ๊ก: 3 มกราคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา