தொழிலதிபர் ராஜநாயகம் திடீரென கோமா நிலைக்கு செல்கிறார். ஆனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதற்கு முன்பே யாரோ ஒருவரால் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவிக்க ஏற்பாடு நடக்கிறது.
அதே சமயம் மருத்துவமனையில் அவரது கையில் 'சத்யாவின் சபதம்' என்ற வாசகம் எழுதப்படுகிறது.எழுதியது யார் என்ற குழப்பத்துடன் போலீஸ் விசாரணையைத் தொடங்குகிறது. இதே போல் ஒரு வாசகம் கொண்ட மற்றொரு சம்பவம் கேரளாவில் நடைபெற்றதை அறிந்து இரண்டு சம்பவங்களை இணைத்து போலீஸ் விசாரிக்கிறது. யார் அந்த சத்யா? அந்த சத்யாவின் சபதம் தான் என்ன?
இதற்கிடையில் வகுளா, முகநூலில் நட்பான பத்ரியின் மூலம் அடுக்கடுக்கான பிரச்சனைகளை சந்திக்கிறாள்.எந்த மாதிரியான இடர்பாடுகள்...எவ்வாறு அவற்றை எதிர்கொள்கிறாள்... அவற்றிலிருந்து மீள முடிந்ததா...?
வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...
วันเปิดตัว
อีบุ๊ก: 5 มกราคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา