ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
1
கண்ணனும் குசேலுனும் குருகுல நண்பர்கள். குசேலர் வறுமையில் துன்புற்று கண்ணனிடம் உதவி பெற்று செல்வந்தரானார். செல்வம் சேர்ந்தவுடன் சுயநலமுடன் வாழ்ந்து தருமம் செய்யாமல் மரணமடைந்துவிட்டார்.
காலடியில் ஒரு குடிசை வீட்டு வாயிற்படியில் நின்று பிட்சை கேட்கிறார் இளம் சந்யாசி. அவர் பெயர் சங்கரர். அவருக்கு பிட்சையிட ஏழை வீட்டில் ஒன்றும் இல்லை. இருந்தாலும் இளந்துறவியை வெறுமனே அனுப்ப அந்த ஏழை பெண்ணுக்கு மனமில்லை. ஆதலால் சுவாமிக்கு படைக்க வைத்திருந்த நெல்லிக்கனியை கொண்டு வந்து இளந்துறவிக்கு பிட்சையிடுகிறாள். அவளின் தர்ம குணத்தை மெச்சிய சங்கரர் அவளின் ஏழ்மை நிலைக்கு மனமிறங்கி மகாலட்சுமியை வேண்டி பாடுகிறார். அவ்வாறு அவர் பாடியதே கனகதாரா ஸ்தோத்திரம் ஆகும். சங்கரர் குரலுக்கு செவிசாய்த்த திருமகள் தோன்றி அந்த வீட்டில் பொன்மழை பொழிகிறாள். அத்துடன் சங்கரரை நோக்கி சங்கரா.. குசேலர் தம்பதி முற்பிறவியில் கண்ணனிடம் செல்வம் பெற்று தர்மம் செய்யாமல் அனுபவித்தனர். அந்த தம்பதியே மீண்டும் பிறந்து வறுமையில் வாழ்கிறார்கள். இப்பிறவியில் பெற்ற செல்வம் கொண்டு தான தர்மம் செய்து வாழ அருளாசி என கூறி மறைந்தாள் திருமகள்.
ஆதிசங்கரர் வழங்கிய கனகதாரா ஸ்தோத்திரத்தை நான் தங்கமழை என்று தமிழ்படுத்தியுள்ளேன். இதைபடிப்பவர்களுக்கு திருமகள் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 12 สิงหาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย