Step into an infinite world of stories
Fiction
உலகால் இருபதாம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட தலைசிறந்த சிந்தனையாளர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (ஜே.கே). அவரது சிந்தனைகளும், போதனைகளும் பேதமற்ற மானுடத்திற்கு சொல்லப்பட்டது. ஜாதியால், மதத்தால், வர்க்கத்தால் வேறுபட்டிருக்கும் மானுடத்திற்கு நல் வழி காட்டுபவை அவரது போதனைகள். அன்பின் வழியிலான அவரது ஞானமார்க்கம் மானுடப் பொது என்றாலும் அவர் வாழ்ந்த காலத்திலும் இன்றும் அது கற்றறிந்த மேட்டுக்குடிக்கு மட்டுமே சொந்தம் எனும் நிலைதான் உள்ளது. அவர் ஆங்கிலத்தில் அறியப்பட்ட அளவு தமிழில் அறியப்படவில்லை. அவரைப் பற்றிய சரியான அறிமுகம் தமிழ் மண்ணில் கீழ் தட்டு மக்களுக்கு, கிராமப் புரவாசிகளுக்கு நிகழவில்லை. திருப்பூவணம் எனும் சிற்றூரில் வாழும் நந்து எனும் சிறுவனின் வாழ்வில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எப்போது, எப்படி அறிமுகமாகிறார் என்பதே இந்நூல். சுயசரிதை போல் படும் இந்நூல் புதினமற்ற நடை என்றாலும், அழகிய கவிதைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஜேகேயின் ஆக்கபூர்வமான சிந்தனைகள் கிளப்பிய அலையில் உதித்தவை இக்கவிதைகள். ஜேகே பற்றி அறிமுகப்படுத்தும் இம்மாதிரி நூல்கள் அதிகமில்லை. இதுவே முன்மாதிரி. எடுத்தால் படித்து முடித்து வைக்கத் தோன்றும் நடை. வாழ்க!
Release date
Ebook: 7 July 2022
English
India