Step into an infinite world of stories
Non-Fiction
அற்புத அவதாரம் ஶ்ரீ சத்யசாயி பாபாவின் பிரமிக்க வைக்கும் வரலாற்றை 42 அத்தியாயங்களில் சுவை படத் தரும் நூல் இது. 1926-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி அவதாரத் தோற்றம் நிகழ்ந்தது. 24-4-2011-ல் அவதாரப் பணி பூர்த்தியாகியது. இடைப்பட்ட காலத்தில் ஏராளமான யோகிகள், விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், சாமானியர்கள் உள்ளிட்டோர் அன்றாடம் பாபாவை தரிசித்து அருளாசி பெற்றனர்.விஞ்ஞானிகள் பெற்ற அனுபவங்கள் மிகவும் அதிசயமானவை. அவற்றை இந்த நூல் விளக்குகிறது. அத்தோடு அம்ருத ஸாகரம் என்னும் சாயி உபதேச மஞ்சரியில் பகவானின் அருளுரைகளில் 108-ஐத் தேர்ந்தெடுத்துத் தருகிறது. சாயி அமிர்த ஸாகரத்தில் எல்லாவிதமான அற்புதங்களும், (சிருஷ்டி) மர்மங்களும், வண்ணக் கலவைகளும் நிறைந்து உள்ளன!
நூலில் உள்ள சில அத்தியாயங்களின் தலைப்புகள் : பிரசாந்தி நிலையம், ரிஷிகேச யாத்திரை, கிழக்கு ஆப்பிரிக்க விஜயம், கஸ்தூரி கண்ட அன்புக் கடவுள், சிவராத்திரி லீலை, அற்புதங்கள் என் விசிடிங் கார்டுகள், இந்திய விஞ்ஞானிகளின் வியப்பு, சத்ய சாயி சேவா நிறுவனங்கள். சுவாமியின் ஒளிவட்டம், இறந்தவர் எழுந்தார் சைக்கியாட்ரிஸ்ட் கண்ட சாயிகியாட்ரி, விஞ்ஞானிகளை வியக்க வைத்தவர். நக்ஸலைட் பக்தரானார், சுவாமியின் அவதார பூர்த்தி அனைவரும் படித்து ஆனந்திப்பதோடு சாயி பக்தர்களுக்குப் பரிசாக அளிக்க உகந்த நூல் இது.
Release date
Ebook: 28 March 2025
English
India