Step into an infinite world of stories
Religion & Spirituality
இந்தக் கலியுகத்தில் மஹரிஷி எவர் ஒருவரையேனும் காட்ட முடியுமா, அவர் வாக்கும் நடை உடை பாவனையும் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா என்று யாரேனும் கேட்டால் அண்மைக் காலத்தில் பகவான் ரமண மஹரிஷியை அனைவரும் சுட்டிக் காட்டினர். அப்படி ஒரு அற்புத வாழ்க்கை அவருடையது.
அவரது வாழ்க்கை நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவரது அணுக்க சீடர்களாக அமைந்தோர் பலர் அன்றாடக் குறிப்புகளை எழுதி பெறுதற்கு அரிய ஆன்மீக பொக்கிஷத்தை சந்ததியினருக்கு அளித்துள்ளனர். அவர்களுக்கு நமது நன்றி.
இந்த ஆவணங்கள் அனைத்தும் பல்வேறு புத்தகங்களாக திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் வாயிலாக அழகுற வெளியிடப்பட்டுள்ளன.
பகவான் ரமணர் எளிய உபதேசம் ஒன்றை உலகுக்கு அருளினார். ‘நான் யார்’ என்ற ஆத்ம விசாரத்தை மேற்கொள் என்பது தான் அது!
அவர் பால் பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டு அவரது உபதேச உரைகளைக் கேட்டுப் பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவிலும் பல வெளிநாடுகளிலும் பயனடைந்துள்ளனர்.
அவரது வாழ்க்கையில் நடந்துள்ள சுவையான சம்பவங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை அவ்வப்பொழுது பத்திரிகைகளிலும் இணையதளத்திலும் கட்டுரைகளாக எழுதி வந்தேன். அவற்றின் தொகுப்பே இது.
Release date
Ebook: 9 May 2022
English
India