Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
வசந்தத்தின் பேரிடியாய்...
கலைஞன் கவிதைக்குள் நுழைகிற அனுபவம் வித்தியாசமானதுதான். புற உலகின் நிகழ்வுகள் அகத்தே எழுச்சி பெற்று புதுவிதப் பாய்ச்சலை ஏற்படுத்துகின்றன.
கவிதை மொழிகள் காலந்தோறும் ஒரே சீராய் இருந்ததில்லை. கவிதைக்குள் புதுமைகளும், பல புதிய புதிய பரிமாணங்கள் கவிதைக்குள் நிகழ்வதும் இங்கு சாத்தியப்பாடாய் இருக்கின்றன.
கவிதைகள் எழுத எழுத ஒவ்வொன்றும் பல்வேறு பிரச்சனைகளை அனுகுவதோடு அவற்றின் மையப்பொருள் என்பது சமூகச் சூழலைப் பிரதிபலிப்பவையாக உள்ளன. சமூகம் பற்றிய பதிவுகள் உள்ளுக்குள் சிறுசிறு தீப்பொறியாய் ஆகி அவை வசந்தத்தின் பேரிடியாய் ஒலிக்க வேண்டும் என்பதன் முன்னோட்டம்தான் எனது கவிதைகளின் துவக்கப் புள்ளி.
இது எனது இரண்டாவது கவிதைத் தொகுதி. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகால கலை அனுபவங்களும் இலக்கிய வாசிப்பும் கவிதைக்குள் உள் நுழையப் போராடியதன் விளைவும்தான் மீண்டும் ஒரு தொகுப்பு வெளிவரக் காரணமாய் இருக்க முடிந்தது. இயல்பான சமூகப் பிரச்சனைகளோடு தலித் மக்கள் ஒடுக்குமுறைக்குள்ளாகும் வன்கொடுமைக்கெதிராகப் பல கவிதைகள் இத்தொகுப்பில் நியாயம் பேசுகின்றன. உரிமைகள் கேட்கின்றன. இவைகள் காலத்தின் நெருக்கடிகள் மட்டுமல்ல, விடுதலைக்கான தேவையாகவும் இருக்கிறது. இவற்றோடு சிறு கவிதைகளும் இணைந்து சமூகம் பற்றிய நுன்மதிப்பீடுகள் போலன்றி ஓரளவேனும் யதார்த்தம் படச் சித்தரிக்கின்றன. என்றாலும் அவைகள் தேர்ந்த வாசகனை விட்டு விலகிச் செல்லாது என்ற நம்பிக்கையும் கூடவே எழுகிறது.
‘எவரும் அறியாத நாம்' எனும் இத்தொகுப்பின் பல கவிதைகள் பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்தவை.
- விழி.பா.இதயவேந்தன்
Release date
Ebook: 18 December 2019
English
India