Step into an infinite world of stories
Short stories
சமீபத்தில் எழுதிய எட்டுச் சிறுகதைகளின் தொகுப்பு தான் இன்னொரு சுதந்திரப் போர்.
வளரும் பருவத்தில் சாதிப்பற்று இன்றி சரிசமமாகப் பழகும் மாணவர்கள் வாலிபர்கள் ஆனதும் சாதி வெறி என்னும் சாக்கடையில் விழுந்து விடுகிறார்களே என்ற வேதனையில் வெளிப்பட்டது தான் இன்னொரு சுதந்திரப்போர்.
“கோபுரங்கள் சாய்வதில்லை” என்ற சிறுகதை ஒரு விவசாயியின் வெள்ளை மனதையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்துவது.
“அன்புள்ள அப்பா” வளர்ந்துவரும் முதியோர் இல்லங்கள் ஏற்படுத்திய வேதனையால் விளைந்தது. “மீண்டும் ஒரு சகுந்தலை” இன்றைய நாகரிக உலகில் இளம் பெண்கள் பாதிக்கப்படுவதை நினைத்தால் வந்தது. “கலையும் மேகங்கள்” உறவுகளின் நிலைகளை நினைத்ததால் உருவானது.
“தென்றல் மூட்டிய தீ” முதிர்கன்னிகளை நினைத்து நினைத்து உருகியதால் உருவானது! “காமம்” ஆணைப் போல பெண்ணுக்கும் உண்டு என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டது.
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள “விடியல்” இலக்கிய இதழ் பன்மலரில் முதல் பரிசு பெற்றது. குழந்தை தொழிலாளர்கள் கூடாது என்பதை வலியுறுத்த எழுதப்பட்டது.
“நிலைமாறும் நிஜங்கள்” சற்றே பெரிய கதை. உண்மையான ஒரு போலீஸ் அதிகாரி உடைந்து போன ஒரு பெண் இவர்களை மையமாக வைத்துப் பின்னப்பட்டது. நாடக பாணிக் கதை என்று கூட சொல்லலாம்.
இத்தொகுப்பில் உள்ள எட்டுச் சிறுகதைகளும் உங்கள் இதயத்தைத் தொட்டுப் பேசி, உங்கள் உள்ளுணர்வுகளைத் தட்டி எழுப்பும் என்று நம்புகிறேன். இவற்றைப் படிப்பவர்கள் ஒரு நொடியாவது நாட்டு நடப்புகளை நினைத்தால் அதுவே இவற்றை எழுதியவனின் வெற்றி!
Release date
Ebook: 4 June 2020
English
India