Step into an infinite world of stories
Religion & Spirituality
பல நல்ல உள்ளங்களை இணைத்து 'இளைய பாரதத்தினாய் வா... வா... வா...' என்ற முழக்கத்தோடு சிறப்பாக இயங்கிவரும் 'இலக்கியச்சாரல்' என்ற அமைப்பின் தலைவர் 'உழவுக்கவிஞர்' உமையவன் கள ஆய்வின் மூலம் அரிதின் முயன்று எழுதிய 'கொங்கு நாட்டுக் கோயில்கள்' என்ற பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட வியக்க வைக்கும் நூலைப் படித்து மகிழ்ந்தேன். இது கவிஞரின் 11ஆம் நூல் என்பது சிறப்புச் செய்தியாகும்.
எல்லோராலும் நன்கு அறியப்பட்ட சிவன்மலை, சென்னிமலைக் கோயில், ஓரளவு அறியப்பட்ட அன்னூர், பண்ணாரி, குருநாத சுவாமி கோயில்களோடு மிகவும் வெளிச்சத்திற்கு வராத மல்லியம்மன், வனபத்ரகாளி, கொருமடுவு பாலதண்டாயுதபாணி கோயில்கள் பற்றிய செய்திகள் சேகரித்து வெளியிட்டிருப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது.
ஒவ்வொரு தலைப்பிலும் அக்கோயிலின் மிக சிறப்பான செய்தியைத் தந்திருப்பது வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் நண்முயற்சியாகும். எடுத்துக்காட்டாக 'பறவை வடிவ', 'தாலிக்குத் தங்கம் தரும்' போன்றவைகளைக் கூறலாம்.
கோயில்களின் இருப்பிடம், தலவரலாறு, அமைப்பு, சன்னதிகள், பூசை முறை, தல விருட்சம், சிறப்புகள் இவைகள் முறைப்படி நன்கு விரிவாக விளங்கப்பட்டிருப்பது பாராட்டுக்கு உரியது. கோயில்களில் நடைபெற்ற அற்புதங்களைக் கூறியிருப்பது அத்தலத்தின் பெருமையை விளக்குவதாக உள்ளது. இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு பற்றிய முக்கியத் தகவல்கள் இடம் பெற்றிருப்பது போற்றத்தக்கது.
பாதையற்ற துருவத்தில் வாழும் மலைமக்கள் நிலை நம் நெஞ்சை உருக்குகிறது. இந்நூல் வாயிலாக அவர்கட்கு நல்லகாலம் பிறக்கலாம்.
'கொங்கு நாட்டுக் கோயில்கள்' மிகச் சிறந்த ஆலய வழிகாட்டி நூல். இதுபோல் தொடர்ந்து பன்னூல்கள் படைத்து சமயப்பணி செய்ய உமையவன் அவர்களை வாழ்த்தி மகிழ்கின்றேன்.
அன்புடன்
செ. இராசு.
Release date
Ebook: 18 May 2020
English
India