Step into an infinite world of stories
அசிஸ்டெண்ட் கமிஷனர் தீனதயாளுவின் மகள் சம்யுக்தா பிரியமாய் வளர்த்து வந்த ரேம்போ என்னும் நாய்க்கு திடீரென வெறி பிடித்து தெருவில் போவோர் வருவோர் எல்லோரையும் தாறுமாறாய்க் கடிக்கின்றது. ஊர் மக்கள் அவர் வீட்டின் முன்னால் வந்து நின்று ஆர்ப்பாட்டம் செய்ய, தனது கைத் துப்பாக்கியால் அதைச் சுட்டுக் கொல்கிறார் தீனதயாளு.
அதன் காரணமாய், கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் சம்யுக்தா. தனது போலீஸ் செல்வாக்கை வைத்துத் தேடியும் அவள் இருக்குமிடத்தை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த காரணத்திற்காய் ஒரு ஆளை சுட்டுக் கொல்கிறார் தீனதயாள்.
அந்தச் சாவுக்கு நீதி கேட்க அவர் வீடு தேடி வருகிறாள் சம்யுக்தா....
தீனதயாளுவால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் யார்?
தந்தையும் மகளும் மோதினார்களா...? போன்ற வினாக்களுக்கு கதையும் விடையளிக்கின்றார் கதாசிரியர்.
Release date
Ebook: 5 February 2020
English
India