Step into an infinite world of stories
ஒரு வருடத்திற்கு முன்பாக இதே “கண்மணி” நாவலில், “நாத்தனார்” என்ற நாவல் வெளியாகி வாசகர்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியது. பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு. ஆதரித்தும், எதிர்த்தும் பல வித விமர்சனங்கள். நல்ல நாத்தனார்கள் பாராட்டினார்கள். கெட்ட நாத்தனார்கள் என்னை வசை பாடி தீர்த்தார்கள். அந்த நாவல் “புஸ்தகா டாட் காமில்” வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆடியோவிலும் இதை கேட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் “நாத்தனாரின்”அடுத்த பகுதியை எழுத சொல்லி அழைப்பு. பெருவாரியான வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இதோ உங்கள் கையில் “நாத்தனார்.2”.. இது அந்தக்கதையின் தொடர்ச்சி அல்ல. இது வேறு நாத்தனார். அவள் “இந்திரா”. இவள் “சந்திரா”
“சந்திரா” வை படித்து, பாராட்டுவதும், கற்களை வீசுவதும் உங்கள் விருப்பம்.
“நாத்தனார்.2” வை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
Release date
Ebook: 5 January 2022
English
India