Step into an infinite world of stories
Religion & Spirituality
‘எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்று பரவசப்பட்டான் மகாகவி பாரதி. அவன் நோக்கில் எங்கும், எந்த நிகழ்வுக்கும் அவன் வணங்கிய பராசக்தியே ஆதாரமாக இருப்பதை உணர்ந்து சிலிர்த்தான். எண்ணம் கருவாகி, செயலாக பிறப்பெடுக்கிறது. இப்படி அடிப்படையில் எண்ணம் முதலாக எல்லாமே சக்தியின் அம்சம்தான். எதையும் பிறப்பிக்கும் வகையில் எல்லாமே தாய்மையின் கருணைதான். விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் ‘ஆனந்தம் பரப்பிரம்மேதி யோனி’ என்று ஒரு சொற்றொடர் வருகிறது. அது தாய்மையைப் போற்றும் சொற்றொடர் என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் புரியும். ஆமாம், ஓர் உயிருக்கு உடல் கொடுத்துப் பிரசவிக்கும் ஒரு பெண்தான் அந்தப்பெருமையில் எவ்வளவு சந்தோஷப்படுகிறாள்! அதேபோல அவ்வாறு பிறப்பெடுக்கும் உயிர் நலமாக, வளமாக, நீண்டநாள் வாழ்வதைக் காணவும் அவள்தான் எவ்வளவு துன்பம் மேற்கொள்கிறாள்! ஒரு மனிதத் தாய்க்கே இப்படி ஒரு பெருமை, பொறுப்பு, ஆனந்தம் என்று இருக்குமானால், இந்த பிரபஞ்சத்தையே உற்பவித்து, காத்து அருளும் அன்னை பராசக்தியின் மகிமையை என்னென்று சொல்வது!
அந்த பராசக்திதான் உலகெங்கிலும் வழிபாட்டு அம்மனாக வியாபித்திருக்கிறாள்.
Release date
Ebook: 17 May 2021
English
India