Step into an infinite world of stories
அன்புள்ள உங்களுக்கு
வணக்கம்,
ராணி - வார இதழில் தொடராக வந்த கதை இது. நிறைய சம்பவங்களும், நிறைய திருப்பங்களும் வைத்து எழுதப் பெற்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையைச் சார்ந்தது. பொதுவாக எனக்கு ‘ஓப்பன் சஸ்பென்ஸ்’ வைத்து கதை எழுதவே பிடிக்கும். அதாவது ஹிட்ச்காக் டைப்! இன்னார்தான் குற்றவாளி, இதுதான் நடக்கப் போகிற குற்றம் என்பதையெல்லாம் தெளிவாகச் சொல்லிவிட்டு பரபரப்பான சம்பவங்களை அமைத்து எழுதும் வகை. ‘குற்றவாளி யார்?’ என்று கடைசி வரை சஸ்பென்சில் வைக்கிற கதைகளை நான் குறைவாகவே எழுதியுள்ளேன். அவற்றில் இதுவும் ஒன்று. கதையைப் படித்துக் கொண்டே வரும்போது... இசையமைப்பாளரை கொலை செய்தது யார் என்று நீங்கள் நடுவிலேயே யூகித்துவிட்டால் கீழ்க்கண்ட வார்த்தையை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்.
இமயத்திற்கு நன்றியுடன், பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டைய பிரபாகர்
Release date
Ebook: 18 May 2020
English
India