Step into an infinite world of stories
Children
"பானைக்குள் போன யானை" (சிந்திக்க வைக்கும் சிறுவர் நாடகங்கள்) என்னும் தலைப்பில், சிறுசிறு நாடகங்களாக 14 நாடகங்களைத் தமது நூலில் வழங்கியிருக்கிறார். ஒருசில நாடகங்களில் பாத்திரங்கள் மனிதர்களாக வருகின்றனர். சிலவற்றில், மிருகங்களும், பறவைகளும் பாத்திரங்களாக மாறியும், பேசியும் கருத்துக்களைக் கூறுவதுபோல் அமைந்துள்ளன.
சிலவற்றில் வெளிப்படுகின்ற நீதியும், கருத்துமே முக்கியமாகும்! அத்தகைய நல்ல நீதிகளை இந்நாடகங்கள் நமக்கு எடுத்தியம்புவது சிறப்பு. செல்போன்களால் ஏற்படும் பெருந்தொல்லை, மறதியினால் வரும் கேடு, ஒற்றுமையே உயர்வானது, பொய் சொல்லுதல் கூடாது, ஒரு நாடகத்தில் நூலகத்தால் கிடைத்த நன்மை, நல்லகுணம் கொண்டவர்களாக இருப்பதே சிறப்பு, குடும்பத்தின் வேலைகளை அனைவரும் பகிர்ந்து செய்ய வேண்டும். அதுவே உயர்வளிக்கும், மூட நம்பிக்கை கூடாது, கரோனா நோய்த் தொற்றால் கிடைத்த நன்மைகள், நோய்த் தொற்று காலத்தில் சிறார்களிடையே இருக்கும் விழிப்புணர்வு (நேசக்கரம்), மறதியால் வரும் துன்பம் என்பன போன்ற வளரும் குழந்தைகளுக்கான நல்ல கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
Release date
Ebook: 17 August 2022
English
India