Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Paper Padikkum Erumbu

Language
Tamil
Format
Category

Fiction

நவரசங்களில் இந்த நகைச்சுவை ரசமிருக்கிறதே அது மட்டும் மற்ற ரசங்களிலிருந்து தனித்து நிற்கும் ஒரு புதுரசம்! அதாவது புதுவகையான ஒரு பாதரசம்!

பாதரசத்தில் எதுவுமே ஒட்டாது என்பார்களே, ஆனால் இந்த நகைச்சவை பாதரசமோ தேடிச் சென்று எங்கும் ஒட்டிக் கொள்ளும்! அந்த பாதரசத்தை சிந்தினால் அள்ளுவது பிரம்ம பிரயத்தனம்! இந்த நகைச்சுவை பாதரசத்தையோ, சிந்தினால், சிந்தியதை விடவும் பெருமளவு சேர்த்து அள்ளிக் கொள்ளலாம்.

ஒருமுறை கல்கி கேள்வி - பதில் பகுதிக்கு வந்த கேள்வி! "இந்த நகைச்சுவை உங்களுக்கு எப்படி வருகிறது? உங்களுடைய நகைச்சுவைக்கு யார் காரணம்?" இப்படி அவ்வப்போது கேள்விகள் வரும்தான்! அதற்கான பதிலை இப்போது இங்கே குறிப்பிட விரும்புகிறேன்! பொருத்தமான இடம் இது.

நான் தினமும் சாமி கும்பிடுவேன்! ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும், இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு சாமி இருக்கும். நகைச்சுவைக்கு அப்படிப்பட்ட ஒரு சாமி திரு. பாக்கியம் ராமசாமி. அவர் நான் கும்பிடும் சாமி.

அந்த அளவுக்கு அடியேன் பாக்கியம் ராமசாமிக்கு பக்தன்!

கடவுள் உண்டு என்பவன் ஆஸ்திகன். கடவுள் இல்லை என்று சொல்பவன் நாத்திகன். கடவுள் உண்டு என்பவரையும், கடவுள் இல்லை என்று சொல்பவரையும் உண்டு - இல்லையென்று ஆக்குபவன் ஹாஸ்திகன்! அப்படிப்பட்ட அருமையான ஹாஸ்திகன் திரு. பாக்கியம் ராமசாமி.

திரு. பாக்கியம் ராமசாமி அவர்களுடன் பலமுறை தொலைபேசி வாயிலாக உரையாடியிருக்கிறேன். வாசகர்கள் என்னிடம் கேட்கும் அது போன்ற கேள்விகளை அவரிடத்து வைத்து பல பதில்களை ஏற்கெனவே பெற்றிருக்கிறேன். அதனால்தான் இன்று வாசகர் கேள்விகளுக்கு பதில் தரும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன்.

திரு. பாக்கியம் ராமசாமி பழகுவதற்கு மிகமிக இனிமையானவர். உரையாடும் போதெல்லாம் நகைச்சுவை இவருக்குள் எப்படி, எங்கே சுரந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணம்தான் எனக்குள் தோன்றும்.

அவர் எழுத்து ஓர் ஆயிரங்காலத்துப் பயிர் என்றால் மிகையல்ல! நகைச்சுவையாக எழுதுவது என்பது எல்லாருக்கும் அவ்வளவு எளிதாக சித்திக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இவருக்கு மட்டும் அதெப்படி இவ்வளவு சர்வ சாதாரணமாக வருகிறது என்ற மயக்கம் எப்போதும் எனக்கு உண்டு.

அந்த நகைச்சுவை சுரபிக்கு இதோ இப்போது எண்பதாவது வயது பூர்த்தியாகிறதாம்! சிரிப்பு மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கும் என்ற உண்மைக்கு கண்கண்ட உதாரணமாக இதோ அவர் சிரித்தபடியே இருக்கிறார். நம்மை சிரிக்க வைத்த படியும் இருக்கிறார். அவர் நூறாண்டுகட்கும் மேலாய் வாழ வாழ்த்துகள்.

இனி நமக்கென்ன சிரிக்கத் தயக்கம்? அவர் எழுத்தும் பேச்சும், அவரது வாழ்வும் வாக்கும் என்று தாராளமாய் எடுத்துக் கொள்பவர்களை, பிறரை சிரிக்க வைக்கும் கியாரண்டியைப் பெறுவார்கள். நான் அந்த கியாரண்டியைப் பெற்றிருப்பதாக நினைக்கிறேன்.

இந்த அணிந்துரை எழுதும் அளவுக்குகூட நேரமில்லாமல் பிறரை சிரிக்க வைக்கப் பறந்து கொண்டிருக்கும் வேளையில் தொலைபேசி வாயிலாக தருகிறேன். இதை ஸ்ரீவில்லிப்புத்தூர் ரங்கமன்னார் கோதை நாச்சியார் கோயிலில் நின்று சொல்லும்போது இன்னும் சிலிர்ப்பு கூடுதலாய் உணர முடிகிறது.

திரு. பாக்கியம் ராமசாமி எழுத்து சிறக்கட்டும்!

இவர் இன்னும் நூறாண்டுகள் வாழ இந்த ரங்கமன்னார் கோதை நாச்சியாரிடம் வேண்டுகிறேன்! வணங்குகிறேன்!

அன்புடன், கிரேஸி மோகன்

Release date

Ebook: 2 February 2022

Others also enjoyed ...