Step into an infinite world of stories
Religion & Spirituality
பழம் பெரும் பாரத இதிஹாஸமான இராமாயணத்தைப் படிப்பதால் என்னென்ன பலன்கள் கைகூடும் என்பதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் பட்டியலிட்டுக் கூறி இருக்கிறார்.
நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும் வேரியங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே.
நூலாசிரியர் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் முதல் பாகத்தில் தசரதன், கைகேயி, மந்தரை, ஶ்ரீ ராமர், லக்ஷ்மணன், கோசலை, பரதன், சுமந்திரர், குஹன் ஆகியோர் பற்றி சாதாரணமாக நாம் அறிந்திராத பல விஷயங்களைத் தன் அருமையான ஆய்வினால் தொகுத்துத் தந்துள்ளார்.
வால்மீகி ராமாயணத்தை மட்டுமின்றி இராமாயண வெண்பா, வீரபத்திர ராமாயணக் கும்மி, நலுங்கு மெட்டு ராமாயணம், ராமாயண அம்மானை உள்ளிட்ட பல இராமாயண நூல்களிலிருந்து குறிப்புகளை ஆங்காங்கே இந்த நூலில் தந்திருப்பது இதுவரை படித்திராத நுட்பமான விஷயங்களைப் படிக்கும் வாய்ப்பைத் தருகிறது. இந்த நூல் குடும்பத்தினர் அனைவரும் படிப்பதற்கு ஏற்றது. நண்பர்களுக்கும் இளம் வயதினருக்கும் பரிசாகக் கொடுக்க ஏற்ற நூல் இது.
Release date
Ebook: 15 December 2023
English
India