Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
4 Ratings

4.8

Language
Tamil
Format
Category

Fiction

மைதிலி என்கிற அந்தப் பெண்ணின் பரிசுத்தமான அன்பு சமூகத்தின் அத்தனைக் கட்டமைப்புகளையும் தாண்டியது. தன்னைக் காப்பாற்றிக் கரைசேர்த்தவன், முழு உடலைப் பார்க்க நேர்ந்ததே அவள் மனத்தில் முதல் ஈர்ப்பு ஏற்படக் காரணமாக இருப்பதாகக் கையாளும் சம்பவமே, நாம் வாசிக்கும் வேகத்தை வலுப்படுத்த வைக்கிறது.

ஆசிரியர் பல இடங்களில் குறியீடுகளைக் கையாண்டிருக்கிறார். தன் திருமண வாழ்வைக் காப்பாற்றியவன் மீது ஏற்படும் பரிவு, வைர மோதிரத்தை ஆற்றுக்குள்ளிருந்து பத்திரமாக எடுத்துத்தந்தால் ஏற்பட்ட கனிவு போன்றவையெல்லாம் நமக்குள் மறைந்திருக்கும் அன்பு வெளிப்பட சம்பவங்களே சாட்சியாகின்றன என்பதற்கான அடையாளங்கள். அங்கங்கே தெறிக்கும் நகைச்சுவையும், ஆத்திக - நாத்திக வாதங்களும் புதினத்தை இன்னொரு பரிமாணத்திற்கு எடுத்துச் செல்கிறது.

நதிக்கு நாம் என்ன பெயர் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ரங்கநாதனின் காலை நனைப்பதால் அது ரங்கநதியாக இருக்கலாம். ரங்கனுக்கு ராக்கதியாக இருந்து, தாயாக மாறியதால் அது ரங்கநதியாக அழைக்கப்படலாம். அவனை அது ஒருபோதும் கைவிடாது என்பது கதையின் உச்சகட்டத்தில் உரத்துச் சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்பும் தத்துவப் பிழிவாக ஒரு கருத்தை நாவலாசிரியர் நவில்கிறார். அவற்றைத் தனியாக மீண்டுமொருமுறை வாசித்து, தியானிப்பது வாழ்வு குறித்த நம் புரிதலை வளமாக்கும்.

வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற சம்பவங்கள் முற்றிலும் வேறுமாதிரியாக இருந்தாலும், நியாயத்தையும், நேர்மையையும் ஜெயிக்க வைக்க படைப்பாளிகள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டேயிருக்க வேண்டும். அந்த நம்பிக்கை மட்டுமே நம்மிடம் எஞ்சியிருக்கிறது. அப்படிப்பட்ட ஆழமான நம்பிக்கையை வாசித்த பிறகு பல நாட்கள் வற்றாமல் ஈரமாக நம் உள்ளத்தில் வைத்திருக்கும் இந்த ரங்கநதி மனித நேயம் கலந்த இனிய படைப்பு.

Release date

Ebook: 5 February 2020

Others also enjoyed ...