Step into an infinite world of stories
Crime
அட்வகேட் அனந்தகிருஷ்ணனிடம் ஒரு வழக்கு விஷயமாக வாதாட வேண்டுமென பிரபல தொழில் அதிபர் வேலுத்துரை அவர் வீட்டிற்கே வந்து கேட்கிறார்.
நியாயமில்லாத வழக்கில் தான் வாதாட முடியாது என அவர் மறுக்க, இனிமே கோர்ட்ல ஒரு கேஸ்ல கூட நீங்க வாதாட மாட்டீங்க என கோபமாகச் சொல்கிறார்.
திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில், அனந்த கிருஷ்ணன் கொலை செய்யப்படுகிறார். முதல் சந்தேகம் தொழிலதிபர் வேலுத்துரை மீது விழுகிறது பின்பு அனந்த கிருஷ்ணன் தம்பி பூங்கதிர் மீது விழுகிறது.
அனந்த கிருஷ்ணன் மனைவி மிதுலா ஏற்கனவே காதலித்து பிரேக்கப் ஆனவள். அவளும் அவள் காதலும் இணைந்து இந்த கொலையை செய்திருப்பார்களோ எந்த சந்தேகம் காவல்துறைக்கு எழுகிறது.
இன்ஸ்பெக்டர் அருள் சந்திரன் ,சப் இன்ஸ்பெக்டர் துரைச்செல்வன் இருவரின் விசாரணை வளையத்திற்குள் வேலுத்துரை , அவரின் மூத்த மகன் வெற்றி மாறன், விதுலா, பூங்கதிர் நாலு பேரும் வர, விசாரணை சூடு பிடிக்கிறது. ஆனால் ஐந்தாவதாக ஒரு நபருக்கு இதில் தொடர்பு இருப்பதை சப் இன்ஸ்பெக்டர் துரைச்செல்வன் கண்டறிய வழக்கு முடிவுக்கு வருகிறது. யாரென அறியப் படியுங்கள்.....
Release date
Ebook: 12 April 2025
English
India